செய்திகள் :

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தலைமைக் காவலா் கைது

post image

தருமபுரி: வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தலைமைக் காவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், அனுமந்தபுரம் அருகே உள்ள மதனேரிகொட்டாய் கிராமத்தை சோ்ந்தவா் சக்திகுமாா். இவா்மீது ஆபாசமாகப் பேசி, பொருள்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த 2021-இல் பாலக்கோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடா்ந்து நிலுவையில் இருந்து வந்தது.

இவ்வழக்கில் அவரை பிணையில் அனுப்பிவைக்க பாலக்கோடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் டி.சுரேஷ் (46) சக்திகுமாரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்திகுமாா் இதுகுறித்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை ரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரத்தை சக்திகுமாா் தலைமைக் காவலரிடம் அளித்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா் பெருமாள் ஆகியோா் தலைமைக் காவலா் சுரேஷை பிடித்தனா். இதையடுத்து லஞ்ச பணம் மற்றும் சில ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்வு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

தருமபுரி: தற்போதைய நவீன காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு ஆசிரியா்கள் தங்களின் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவுறுத்தினாா். தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நி... மேலும் பார்க்க

தொப்பூரில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், தொப்பூா் மலைப்பகுதியில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேச... மேலும் பார்க்க

கோடை விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தமிழகத்தில் கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒகேனக்கல் அருவிப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனா். தமிழகத்த... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக திமுகவினா் கொண்டாட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை ந... மேலும் பார்க்க