செய்திகள் :

``வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.3 லட்சம்'' - கையும் களவுமாக சிக்கிய நாகர்கோவில் இன்ஸ்பெக்டர்

post image

நேசமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் மீது நேசமணி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கில் இருந்து சந்தை ராஜனை விடுவிக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார் நேசமணி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ்.

முதல் தவணையாக ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், வழக்கில் இருந்து அவனை விடுவிக்காமல் மீதி தொகையான 1,15,000 ரூபாய் தந்தால் மட்டுமே வழக்கின் குற்றப்பத்திரிகையில் பெயரை நீக்குவதாகவும், இல்லை என்றால் குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்க்கும் என்று கூறியுள்ளார் இன்ஸ்பெக்டர்.

இதற்குமேல் பணம் கொடுக்க விரும்பாத சந்தை ராஜன், லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால் இடம் புகார் கொடுத்து உள்ளார்.

லஞ்சமாக பெற்ற பணம்
லஞ்சமாக பெற்ற பணம்

லஞ்ச பணம்

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை சந்தை ராஜனிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். தன்னிடம் மீதி பணம் உள்ளது என இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷுக்கு சந்தை ராஜன் தகவல் வழங்கியுள்ளார். வெள்ளமடத்தில் உள்ள தனது வீட்டில் பணத்தை கொண்டுவரும்படி இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

சந்தை ராஜன் வெள்ளமடத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வீட்டுக்கு நேற்று இரவு சென்று ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து உள்ளார்.

அப்போது லஞ்ச பணத்தை வாங்கிய அன்பு பிரகாஷை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால், உதவி ஆய்வாளர் பொன்சன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், அருண் அசரியா உள்ளிட்டோர் அடங்கிய டீம் கையும் களவுமாக பிடித்தது.

மயக்கம்

அவரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர் போலீசார். பின்னர் அவரை சிறையில் அடைக்க கொண்டுசெல்லும்போது இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விரைவில் அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கியதால் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ்

நிலுவையில் உள்ள வழக்குகள்

இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, கொள்ளையன் ஒருவன் கொள்ளையடித்த 38 பவுன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளை திருடியதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவரது வீட்டில் சோதனை நடத்தியபோது நகைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ. 1.15 லட்சம் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டார் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ்.

ஆரணி: மனைவியை பிரிந்து மாணவி மீது காதல் - அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்; மாணவியின் தந்தை வெறிச்செயல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்துள்ள முக்குறும்பை ஊராட்சிக்குஉட்பட்ட அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது 27). தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்துவந்த வடிவேலனுக்கு கடந்த இரண்டு ஆண்ட... மேலும் பார்க்க

உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வந்த ஆஸி, வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - இந்தூர் இளைஞர் கைது

நடப்பு மகளிர் உலகக்கோப்பையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் இரண்டு வீராங்கனைகள் மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.Australia Women's Teamகடந்த செப்டம்பர் 30 ஆம் ... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் வேறு நபருடன் பழக்கம்? - 9 ஆண்டு காதலியை குத்தி குத்திக் கொன்று தற்கொலை செய்த வாலிபர்

மும்பை பரேல் பகுதியை சேர்ந்தவர் சோனு(24). வேலை இல்லாத சோனு ஏதாவது கேட்டரிங் வேலைகளுக்கு செல்வது வழக்கம். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனிஷா யாதவ்(24) என்ற பெண்ணை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ம... மேலும் பார்க்க

கோவை: `பல பெண்களுடன் தொடர்பு; முதல் திருமணத்தை மறைத்து.!’- காவலர் மீது புகார் அளித்த மனைவி

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா தேவி (26) . இவர் கோவை டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில், “எனக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு போத்தனூர் காவல் நிலையத்த... மேலும் பார்க்க

`சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டவில்லை; பணமும் பறிக்கவில்லை' - ரியாவுக்கு சிபிஐ நற்சான்று

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இத்தற்கொலைக்கு சுஷ... மேலும் பார்க்க

கோவை: அதிவேகமாக மரத்தில் மோதிய கார் - 4 இளைஞர்களை காவு வாங்கிய பிறந்தநாள் கொண்டாட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (20). இவர் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சபரி அய்யப்பன் (21), தஞ்சாவூர் ம... மேலும் பார்க்க