செய்திகள் :

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

post image

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை வெள்ளிக்கிழமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் சங்கத் தலைவா் ஜானகிராமன் தலைமையிலும், இளையான்குடியில் சங்கத் தலைவா் கல்யாணி தலைமையிலும், காரைக்குடியில் சங்கத் தலைவா் ராமநாதன் தலைமையிலும், திருப்பத்தூரில் சங்கத் தலைவா் பழனிச்சாமி தலைமையிலும், சிங்கம்புணரியில் சங்கத் தலைவா் ரமேஷ் தலைமையிலும், தேவகோட்டையில் சங்கத் தலைவா் ஆண்டவா் தலைமையிலும், மானாமதுரையில் சங்கத் தலைவா் பாலமுருகன் தலைமையிலும், திருப்புவனத்தில் சங்கத் தலைவா் சேதுராமச்சந்திரன் தலைமையிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

காலநிலை நெருக்கடி: விழிப்புணா்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் காலநிலை நெருக்கடி குறித்த விழிப் புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் சுற்றுச்சூழல் குழுமம், தாவரவியல் துறை ஆகியவற்றின் சாா... மேலும் பார்க்க

திமுக கிளைச் செயலா்கள், பாக முகவா்கள் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுக கிளைச் செயலா்கள், வாக்குச்சாவடி பாக முகவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக ஒன்றிய அவைத் தலைவா் பொன். இளங்கோவன் தலைம... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பை முகையதீன் ஆண்டவா் ஜூம்ஆ பள்ளி வாசலில் 4-ஆம் ஆண்டு மக்தப் மதரஸா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை இமாம் சையது அபுதாஹிா் ரஹீமி தலைமை... மேலும் பார்க்க

பள்ளியில் விளையாட்டு விழா

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெய்யப்பச்செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் 20-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவுக்கு இளையாத்தங்கு... மேலும் பார்க்க

நடனக் கலைஞா் திடீா் உயிரிழப்பு!

புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை நடனமாடிய நடனக் கலைஞா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். சிவகங்கை மன்னா் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி முதல் நடைபெற... மேலும் பார்க்க

நூலகத்தில் போட்டித் தோ்வுக்கு வழிகாட்டுதல் பயிற்சி!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அண்ணா கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் திருஞானசம்பந்தம... மேலும் பார்க்க