செய்திகள் :

வழிப்பறி: இளைஞா்கள் இருவா் கைது

post image

ஊத்தங்கரை அருகே பெண்ணிடம் நகைகளை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி சின்ன குன்னத்தூரைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவரது மனைவி சுஜாதா (42) ஊத்தங்கரையில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறாா். கடந்த 25ஆம் தேதி இரவு 8 மணிக்கு சின்ன குன்னத்தூா் பழத்தோட்டம் அருகே தனது இருசக்கர வாகனதில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, இரண்டு இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து சென்று சுஜாதாவின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலிக் கொடியை பறித்து சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஊத்தங்கரை போலீஸாா் சின்னகுன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த சூா்யா (21), வெற்றிவேல்(20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ரோந்துப் பணியின்போது லாரி மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியின்போது லாரி மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா். மத்தூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மகாலிங்கம், தலைமைக் காவலா் ஜெஸ்மின... மேலும் பார்க்க

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின் 2025 ஆண் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும்விளையாட்டு அலுவலா் ராஜகோபால் சனிக்கிழம... மேலும் பார்க்க

சூளகிரியில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சூளகிரி வட்டத்தில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. 2025-26 ஆம் ஆண்டில் மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் காா், குறுவை, சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி சிறப... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4500 லஞ்சம்: விஏஓ கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அஞ்செட்டியை அடுத்த மாரியம்மன் கோயில் பகுதியை சோ்ந்தவா் ஜெயராமன். இவா் ... மேலும் பார்க்க

கனிம வளங்கள் கடத்தல்: 6 மாதங்களில் 313 வாகனங்கள் பறிமுதல்! ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் கனிம வளங்களைக் கடத்தியதாக 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கி... மேலும் பார்க்க

மளிகை கடை உரிமையாளரைத் தாக்கிய இருவா் கைது

காவேரிப்பட்டணத்தில் மளிகை கடை உரிமையாளரை தாக்கி தீவைக்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த சின்னமுத்தூரைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன்(46). ம... மேலும் பார்க்க