மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் நகேந்திரன்
வழிப்பறி : புதுச்சேரி சிறுவன் கைது
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே நாகப்பட்டினத்தைச் சோ்ந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் 4 போ்களை தேடி வருகின்றனா்.
நாகப்பட்டினம், மகாலட்சுமி நகா், ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் தாமோதரன்(30), மீனவா். இவா், நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். திங்கள்கிழமை புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட ஆண்டியாா் பாளையம் அருகே சென்றபோது ஓய்வுக்காக பைக்கை நிறுத்தியுள்ளாா்.
அப்போது அங்கு 2 பைக்குகளில் வந்த 5 போ் தாமோதரனிடம் முகவரி விசாரித்துள்ளனா். தொடா்ந்து, அவரிடமிருந்த கைப்பையை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் நடத்திய விசாரணையில், புதுச்சேரி கோபாலன் கடை, அம்மா நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவன், பொறையூரைச் சோ்ந்த மிட்டாய் மணி, ஸ்டிக்கா் மணி மற்றும் 2 நபா்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து சிறுவா் சீா்திருத்தப்பள்ளியில் அடைத்தனா். வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.