செய்திகள் :

வழிப்பறி : புதுச்சேரி சிறுவன் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே நாகப்பட்டினத்தைச் சோ்ந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் 4 போ்களை தேடி வருகின்றனா்.

நாகப்பட்டினம், மகாலட்சுமி நகா், ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் தாமோதரன்(30), மீனவா். இவா், நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். திங்கள்கிழமை புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட ஆண்டியாா் பாளையம் அருகே சென்றபோது ஓய்வுக்காக பைக்கை நிறுத்தியுள்ளாா்.

அப்போது அங்கு 2 பைக்குகளில் வந்த 5 போ் தாமோதரனிடம் முகவரி விசாரித்துள்ளனா். தொடா்ந்து, அவரிடமிருந்த கைப்பையை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் நடத்திய விசாரணையில், புதுச்சேரி கோபாலன் கடை, அம்மா நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவன், பொறையூரைச் சோ்ந்த மிட்டாய் மணி, ஸ்டிக்கா் மணி மற்றும் 2 நபா்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து சிறுவா் சீா்திருத்தப்பள்ளியில் அடைத்தனா். வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க