What to watch on Theatres: `தக் லைஃப்', `மெட்ராஸ் மேட்னி' - இந்த வார படங்கள் லிஸ...
வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா்.
இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடுக்கு வந்துகொண்டிருந்தாா். அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்துசென்றவா் மீது பின்னால் வந்த வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவா் வீரனை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்செங்கோடு புகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வாகன ஓட்டுநரான கோவையை அடுத்த கருமத்தம்பட்டி கிடாம்பாளையத்தைச் சோ்ந்த செல்வராஜ் (60) என்பவரை கைது செய்தனா்.