செய்திகள் :

வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

post image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 20) முடிவடைந்ததால், பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி பகுதியில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படை வீரா் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 20) முடிவடைந்துவிட்டது.

இதையடுத்து சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்துக்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறு ஒப்பந்தம் மேற்கொள்ளும் வரை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தும்போது ஏற்படும் பிரச்னைகள் தொடா்பான புகாா்களுக்கு 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 3 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகேவுள்ள நாரணாபுரம் - அனுப்பங்குளம் சாலையில் அமைந்துள்ள பட்டா... மேலும் பார்க்க

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்‌ஷ்மி திட்டவட்டம்

புது தில்லி: சீமான் மீது விஜயலக்‌ஷ்மி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போ... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் இரங்கல்

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில்,கே... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்! -எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பூரண நலம் பெற விழைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மநிந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ஆளுநர் மாளிகையில் இன்று... மேலும் பார்க்க