செய்திகள் :

வாக்காளர் பட்டியலில் 6 முறை சுஷ்மா குப்தா பெயர்! ஆனால் ஆச்சரியம் ஒன்று!

post image

மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலின் ஒரே பக்கத்தில் சுஷ்மா குப்தா என்ற பெண் ஆறு முறை இடம்பெற்று ஆச்சரியமளித்திருக்கும் நிலையில், ஆறு வாக்காளர் அட்டைக்கும் தலா ஒரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருப்பது உலக அதிசயங்களுக்கே சவால் விடுவதாக உள்ளது.

ஏதோ திட்டமிடப்படாமல், தெரியாமல் நடந்த தவறுதான் என்று சொல்கிறார்கள் என வைத்துக் கொள்வோம், அதெப்படி ஒரு முறைகூட யாருமே ஒரே பக்கத்தில் இப்படி ஒரே பெண், ஆறு முறை ஒரே புகைப்படத்துடன் இருக்கிறாரே என்று பார்த்திருக்க மாட்டார்களா? இது தொழில்நுட்பத் தவறு என்றால், ஒரே வாக்காளர் பட்டியலில் ஒரே பக்கத்தில் இருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடியா ஒதுக்கப்பட்டிருக்கும்?

ஒருவரே ஒரே வாக்குச்சாவடியில் மீண்டும் மீண்டும் வந்து வாக்களித்தால் சிக்கலாகிவிடும் என திட்டமிட்டு வேறு வேறு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டிருந்தால், அதுவும் தொழில்நுட்பம்தான் இப்படி திட்டமிட்டு கோளாறு செய்திருக்குமோ? என்று சமூக ஊடகங்களில் இந்தப் பக்கத்தைப் பகிர்ந்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த சுஷ்மா குப்தா சம்பவம் நடந்திருப்பது, மகாராஷ்டிரத்தின் பல்காரில் உள்ள வாக்காளர் பட்டியலில்தான். பச்சை நிற புடவையுடன் சுஷ்மா குப்தா என்ற பெண் வெவ்வேறு வாக்காளர் அடையாள எண்களுடன் (EPIC) 6 முறை இடம்பெற்றுள்ளார்.

அதாவது, நாளாசோபாரா சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில், வாக்காளர் பெயர் சுஷ்மா குப்தா, உறவினர் பெயர் சஞ்சய், வயது 39 என அனைத்துத் தகவல்களும் ஒன்றுபோல பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ஒவ்வொரு வாக்காளர் எண்ணையும் பதிவு செய்து பார்த்தால் ஒரு வாக்காளர் எண்ணுக்கு புனித அந்தோணியர் பள்ளி என்றும், மற்றொரு வாக்காளர் அட்டைக்கு புனித மேரி உயர்நிலைப் பள்ளி என ஒவ்வொரு வாக்காளர் அட்டைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருப்பது அதிசயமே அசந்துபோகும் அதிசயம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், ... மேலும் பார்க்க

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு

நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. உத்தர பிரதேச மா... மேலும் பார்க்க

‘5 அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாதது ஏன்?’- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சம்மன்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகள் மீது இன்னும் பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் விளக்கமளிக்கும்படி, மாநில ... மேலும் பார்க்க

ஹைதராபாத் நகைக்கடையில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை - பட்டப்பகலில் துணிகரம்

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நகைக்கடைக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா்கள் துப்பாக்கியால் ச... மேலும் பார்க்க