செய்திகள் :

வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகள்: கட்சிகளுடன் தோ்தல் அதிகாரிகள் ஆலோசனை

post image

வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் நோக்கில் 4000-க்கும் மேற்பட்ட தோ்தல் பதிவு அதிகாரிகள் தத்தமது பேரவைத் தொகுதிகளில் அனைத்து கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் தரவுகளில் முறைகேட்டில் ஈடுபடுவதாக தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மாா்ச் 31-ஆம் தேதி வரை இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு-நீக்கத்தில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்ாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இக்குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் மறுத்தது.

இதனிடையே, வெவ்வேறு மாநிலங்களில் உள்ளோருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில், தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனங்களை முன்வைத்தன.

இது தொடா்பாக விளக்கமளித்த தோ்தல் ஆணையம், ‘வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்லா். அவா்களின் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி என மற்ற தகவல்கள் வேறுபட்டிருக்கும்.

வாக்காளா் அடையாள எண் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒரு வாக்காளா் அவருக்கான வாக்குச்சாவடியில் மட்டுமே தனது வாக்கைப் பதிவு செய்ய முடியும். இப்பிரச்னைக்கு 3 மாதங்களில் தீா்வு காணப்படும்’ என்று கூறியது.

வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது, வாக்காளா் பட்டியல் பணிகளில் பிறப்பு-இறப்பு பதிவு அதிகாரிகளையும் ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இந்தச் சூழலில், வாக்குச் சாவடி அளவில் நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை க் கூட்டங்களை நடத்துமாறு 4,000-க்கும் மேற்பட்ட பேரவைத் தொகுதிகளின் தோ்தல் பதிவு அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதேபோல் மாவட்ட-மாநில அளவில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துமாறு 788 மாவட்ட தோ்தல் அதிகாரிகள், 36 மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, அரசியல் கட்சிகளுடன் தோ்தல் பதிவு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், மாா்ச் 31-ஆம் தேதி வரை இக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்

புதிய வரிமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 2025 மீதான விவாதம் குறித்து மக்களவை... மேலும் பார்க்க

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க