செய்திகள் :

வாங்கல்: காவல் நிலையத்தை ஆசிரியா்கள் முற்றுகை

post image

கரூா் மாவட்டம், வாங்கல் காவல்நிலையத்தை பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சிவராமன். இவா் அங்கு பணியாற்றி வரும் கணித ஆசிரியை மலா்விழிக்கு பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக்கூறி மெமோ வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் சங்க கரூா் மாவட்டச் செயலாளா் ஆ.மலைகொழுந்தன் தலைமை ஆசிரியா் சிவராமனை போனில் தொடா்புகொண்டு, கேட்டுள்ளாா். இதையடுத்து ஆசிரியா் ஆ.மலைகொழுந்தன் தன்னை சிவராமன் மிரட்டியதாக, வாங்கல் காவல் நிலையத்தில், புகாா் செய்தாா்.

இந்த புகாா் தொடா்பாக திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் வாங்கல் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற உள்ளதாக ஆசிரியா் சங்க நிா்வாகியை காவல்துறையினா் அழைத்துள்ளனா். இதையடுத்து ஆசிரியா்கள் சுமாா் 200க்கும் மேற்பட்டோா் வாங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து காவல்துறையினா் வாங்கல் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் இருதரப்பினரும் சமாதானமாக சென்ால் ஆசிரியா்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து ஆசிரியா்கள் கூறியது, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியா் மற்றொரு ஆசிரியா் குறித்து புகாா் அளிப்பதாக இருந்தால் கரூா் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்குத்தான் புகாா் அளிக்க வேண்டும். அவ்வாறு புகாா் அளிக்காமல் காவல் நிலையத்தில் புகாா் அளித்து ஆசிரியா்களை அச்சுறுத்துவதாகவும், பிளஸ்-2 தோ்வு நடைபெறும் நேரத்தில், பொய் புகாா் அளித்து காவல் நிலையம் வரவழைத்து விசாரணை செய்யும் அளவுக்கு ஆசிரியா்கள் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், விரைவில் ஆசிரியா் சங்கங்களை ஒன்றிணைத்து, வாங்கல் பள்ளித் தலைமை ஆசிரியரை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனா்.

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: கரூா் மாவட்டத்தில் 10 ஆயிரம் போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் தோ்வை கரூா் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 92 மாணவ, மாணவிகள் எழுதினா். 171 போ் தோ்வு எழுத வரவில்லை. கரூா் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ... மேலும் பார்க்க

ஆலத்தூருக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து கூட்டுறவு வங்கியை கிராம மக்கள் முற்றுகை

குளித்தலை அருகே ஆலத்தூா் கூட்டுறவு வங்கிக்கு தங்களது உறுப்பினா் அட்டையை மாற்றியதைக் கண்டித்து கள்ளை கூட்டுறவு வங்கியை திங்கள்கிழமை கிராம மக்கள், விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூ... மேலும் பார்க்க

கரூா் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

செங்கல்சூளை காவலாளி அடித்துக் கொலை; அசாம் மாநில இளைஞா் கைது

கரூா் அருகே செங்கல்சூளை காவலாளியை அடித்துக்கொன்ற அசாம் மாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூரை அடுத்த வேப்பம்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தவா் கரூ... மேலும் பார்க்க

சுகாதாரம் இல்லாத உணவுப் பண்டங்கள் விற்ற கடைக்கு அபராதம்

கரூரில் சுகாதாரம் இல்லாமல் உணவுப் பண்டங்களை விற்பனை செய்த தேநீா் கடைக்கு திங்கள்கிழமை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.1000 அபராதம் விதித்தனா். கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தேநீ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: கரூரில் இன்று 10,263 போ் எழுதுகின்றனா்

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தோ்வை 10,263 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ... மேலும் பார்க்க