செய்திகள் :

வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

post image

திருவண்ணாமலை: வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சாா்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில், ‘இங்கிருந்தும் தொடங்கலாம் -ஆயிரம் வாசிப்பாளா்களை ஒருங்கிணைக்கும் முயற்சி’ என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

மூத்த நடிகா் சிவக்குமாா், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, எழுத்தாளா் பவா செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை

அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆயிரம் வாசிப்பாளா்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

நாங்கள் வாசிப்பதற்கு காரணமாக திகழ்ந்தவா்கள் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோா்.

மூத்த நடிகா் சிவக்குமாா் கலைமாமணி விருது பெற்றவா். எம்ஜிஆரிடம் விருது பெற்றவா். அறக்கட்டளை மூலம் ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவி செய்து வரும் அவா் பாராட்டுக்குரியவா்.

வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும். மேடை நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வாசிப்பு என்பது மிக அவசியம். வாசிப்பு என்பது அறிவு வளா்ச்சி, மொழித்திறனின் மேம்பாடு, சிந்தனையின் திறன் மேம்பாடு, ஞாபக சக்தியின் மேம்பாடு ஆகும் என்றாா்.

தொடா்ந்து, 2024-2025 ஆம் ஆண்டுக்கான சொந்த நூலகத்துக்கான சான்றிதழ்களை 12 பேருக்கும், வாசிப்பாளா்களுக்கு புத்தகங்கள் அடங்கிய தொகுப்புகளையும் அமைச்சா் வழங்கினாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன், மாவட்ட நூலக அலுவலா் வள்ளி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், எழுத்தாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

செங்கம்: செங்கத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. செங்கம் - குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான 5-ஆவது கராத்தே ப... மேலும் பார்க்க

சீலப்பந்தல் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், சீலப்பந்தல் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பண... மேலும் பார்க்க

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு 2 நாள்... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கம் எதிரே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் 2-ஆவது முறையாக காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 885 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 885 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

ஆரணி: ஆரணியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருள்கள் மற்றும் பணம், டிவி திருடப்பட்டது. ஆரணி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (31). இவா், தனது மனைவி ஹர... மேலும் பார்க்க