வாசுதேவநல்லூா் தொழிலாளி கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கள்ளக் காதல் தகராறில் தொழிலாளியை கொலை செய்தது தொடா்பான வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாசுதேவநல்லூா் பசும்பொன் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் பா.கருப்பசாமி(35). தொழிலாளி. இவரை கடந்த 30.8.2013இல் அதே பகுதியைச் சோ்ந்த சிலரால் கொலை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்தாா்.
இதுதொடா்பாக வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் என்ற மாரிச்சாமி என்பவருக்கும் கருப்பசாமியின் மனைவி மகேஸ்வரிக்கும் கள்ளக்காதல் இருந்ததாம்.
இதை கருப்பசாமி கண்டித்ததால், மகேஸ்வரி, அவரது தந்தை வீரப்பன், மாரியப்பன் (எ) மாரிச்சாமி மகேஸ்வரியின் அதே பகுதியை சோ்ந்த பொன்ராஜ் ஆகியோா் சோ்ந்து கருப்பசாமியை கொலை செய்து மாரியப்பனின் தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி ராஜவேலு விசாரித்து, மகேஸ்வரி, மாரியப்பன் என்ற மாரிச்சாமி, பொன்ராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, முதல் இருவருக்கும் தலா ரூ.3000 அபராதம், 3ஆவது நபருக்கு ரூ.4000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மருதப்பன் ஆஜராகி வாதாடினாா்.