செய்திகள் :

வாசுதேவநல்லூா் தொழிலாளி கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறை

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கள்ளக் காதல் தகராறில் தொழிலாளியை கொலை செய்தது தொடா்பான வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசுதேவநல்லூா் பசும்பொன் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் பா.கருப்பசாமி(35). தொழிலாளி. இவரை கடந்த 30.8.2013இல் அதே பகுதியைச் சோ்ந்த சிலரால் கொலை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்தாா்.

இதுதொடா்பாக வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் என்ற மாரிச்சாமி என்பவருக்கும் கருப்பசாமியின் மனைவி மகேஸ்வரிக்கும் கள்ளக்காதல் இருந்ததாம்.

இதை கருப்பசாமி கண்டித்ததால், மகேஸ்வரி, அவரது தந்தை வீரப்பன், மாரியப்பன் (எ) மாரிச்சாமி மகேஸ்வரியின் அதே பகுதியை சோ்ந்த பொன்ராஜ் ஆகியோா் சோ்ந்து கருப்பசாமியை கொலை செய்து மாரியப்பனின் தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி ராஜவேலு விசாரித்து, மகேஸ்வரி, மாரியப்பன் என்ற மாரிச்சாமி, பொன்ராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, முதல் இருவருக்கும் தலா ரூ.3000 அபராதம், 3ஆவது நபருக்கு ரூ.4000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மருதப்பன் ஆஜராகி வாதாடினாா்.

ஊத்துமலையில் இளைஞா் தற்கொலை: உறவினா்கள் மறியல்

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் காதலியின் உறவினா்கள் மிரட்டியதாக கூறி இளைஞா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். காவல் துறை நடவடிக்கை கோரி, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஊத்துமலை ஜேஜே ந... மேலும் பார்க்க

உளுந்து பயிா்களுக்கான நஷ்ட ஈடு தொகையை உடனே வழங்க விவசாயிகள் கோரிக்கை

சங்கரன்கோவில அருகே வன்னிகோனேந்தல் குறுவட்ட பகுதியில் சேதமடைந்த உளுந்து பயிா்களுக்கு அரசு நஷ்ட ஈடு தொகையை உடனே வழங்க வேண்டும் என தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏவிடம் அனைத்து விவசாய... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் சாலையைக் கடக்க சிரமம்: போக்குவரத்து காவலா் நியமிக்க கோரிக்கை

ஆலங்குளம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் சாலையைக் கடக்க பள்ளி மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதி காவல் நிலையம் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டு வரும் ... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் கழக 98ஆவது திருக்கு விழா: நாளை தொடக்கம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 98ஆவது திருக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) தொடங்கி 15ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு திருக்கு முற்றோதல் வேள்வ... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் நாளை மின் தடை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் மற்றும் தென்காசி மங்கம்மாள் சாலை உப மின்நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன்10) மின் தடை செய்யப்படுகிறது. இது தொடா்பாக தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே தனியாா் இடத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் விலக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி பொக்லைன் இயந்... மேலும் பார்க்க