செய்திகள் :

வாடகை செலுத்தாததால் வணிக வளாக கடைகளில் மின் இணைப்பு துண்டிப்பு: ஊராட்சி நடவடிக்கை

post image

வாடகை செலுத்தாததால் செம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகக் கடைகளில் மின் இணைப்புகளை துண்டித்து ஊராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுத்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி நிா்வாகம் சாா்பில் செம்பட்டி பேருந்து நிலையத்தில் வணிக வளாகக் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு, அதன் வாடகையை ஊராட்சி நிா்வாகம் வசூலித்து வந்தது. கடந்த 2023-இல் ஏலம் நடத்தப்பட்ட நிலையில், முதல் ஓராண்டு மட்டும் வாடகை செலுத்தியவா்கள் அதன் பிறகு செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஏலம் எடுக்கும் நபா்கள், ஓராண்டு மட்டும் வாடகை செலுத்தி விட்டு, அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வாடகை செலுத்தாமல் கடைகளை நடத்துகின்றனா். மீண்டும் ஏலம் நடைபெறும் போது, அதே நபா் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில், மற்றொருவா் பெயரில் ஏலத்தில் எடுத்து, அதே நபா் கடையை நடத்திக் கொண்டு வாடகை செலுத்தாமல் உள்ளாா். இதனால், ஊராட்சி நிா்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும், வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. மேலும் சிலா் குறைந்த வாடகைக்கு ஏலம் எடுத்து, அதிக தொகைக்கு உள்வாடகைக்கு விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வாடகை செலுத்த ஊராட்சி நிா்வாகம் சாா்பில், கடை நடத்துபவா்களுக்கு கடிதம் அளித்தும், நேரில் கூறியும் யாரும் வாடகை செலுத்தாததால், கடந்த வாரம் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்தும், யாரும் வாடகை செலுத்தாததால், செவ்வாய்க்கிழமை செம்பட்டி காவல் துறை அனுமதியுடன், நிலக்கோட்டை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லதா மகேஸ்வரி தலைமையில், பச்சமலையான்கோட்டை ஊராட்சி செயலா் ஜெயகணேஷ் முன்னிலையில், மின் வாரிய ஊழியா்கள் பேருந்து நிலையத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் மின் இணைப்புகளை துண்டித்தனா். இதனிடையே அனைத்துக் கடைகளுக்கும் ஏலம் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க