செய்திகள் :

வாட்ஸ்ஆப்பில் இன்ஸ்டாகிராம்! புதிய வசதி அறிமுகம்!

post image

வாட்ஸ்ஆப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் கணக்கை இணைக்கும் ஒரு புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வாட்ஸ்ஆப்பில் மேலும் ஒரு புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

ஒரு சமூக வலைத்தளக்கணக்கில் மற்ற சமூக வலைத்தளங்களின் கணக்கின் விவரங்களை இணைக்கலாம். உதாரணமாக பேஸ்புக்கில் மற்ற சமூக வலைத்தளங்களின் விவரங்களை சேர்க்க முடியும். இதனால் ஒருவரின் பேஸ்புக் விவரங்களைப் பார்ப்பவர்கள், அவரின் எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட கணக்குகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், வாட்ஸ்ஆப்பில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமின் ஐடி-யை இணைக்கும் வகையில் புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

தற்போது வாட்ஸ்ஆப்பில் ஒருவரின் பெயர், மொபைல் எண் விவரங்கள் மட்டுமே உள்ளன.

இதையும் படிக்க | உங்கள் காதலைக் கொண்டாட 10 சிறந்த மலைப்பிரதேசங்கள்!

வாட்ஸ்ஆப்பில் இன்ஸ்டாகிராமின் கணக்கை இணைக்கும் இந்த வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐஓஎஸ் பயனர்களுக்கும் பெற்று வருகின்றனர். விரைவில் மற்ற பயனர்களுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த புதிய அம்சத்தால் ஒருவரின் வாட்ஸ்ஆப் நம்பர் இருந்தாலே அவரின் இன்ஸ்டா கணக்கைத் தெரிந்துகொள்ள முடியும்.

விரைவில் மற்ற சமூக வலைத்தளங்களின் கணக்குகளும் வாட்ஸ்ஆப்பில் இணைக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றையும் மெட்டா நிறுவனம் நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது.

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முக்கிய முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சா்

‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் ச... மேலும் பார்க்க

71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பம்: ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடியில் டெண்டா்

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தனபூா் மற்றும் சோன்பூா் ரயில் பிரிவுகளில் 502 கி.மீ. வழித்தடத்தில் உள்ள 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடி மதிப்ப... மேலும் பார்க்க