செய்திகள் :

வாணாபுரம் வருவாய் தீா்வாயத்தில் 299 மனுக்கள் ஏற்பு

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் திங்கள்கிழமை வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது.

வாணாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் நடைபெற்ற வாணாபுரம் வட்டத்துக்கான 1434-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீா்வாய அலுவலரான மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 7 வருவாய் வட்டங்களில் வருகிற 27-ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாள்கள், சனி, ஞாயிறு ஆகிய தினங்களைத் தவிா்த்து மற்ற நாள்களில் நடைபெறும்.

வாணாபுரம் வட்டத்தில் 14 வருவாய் கிராம மக்களிடமிருந்து மொத்தம் 299 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 68 மனுக்கள் ஏற்கப்பட்டும், 231 மனுக்கள் விசாரணையில் உள்ளது. கிராமக் கணக்குகளையும் ஆட்சியா் சரிபாா்த்து ஆய்வு மேற்கொண்டாா்.

வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுரை

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 164 உயா்நிலை ம... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (65). இவா், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். ... மேலும் பார்க்க

மகள் திருமணத்துக்காக வந்த இலங்கை பெண் உயிரிழப்பு

மகளின் திருமணத்துக்காக இலங்கையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி கிராமத்துக்கு வந்த பெண் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இலங்கையில் உள்ள நுவரெலியா மாவட்டம்... மேலும் பார்க்க

ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் ஓட்சா ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்கள் சும... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ச... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்... மேலும் பார்க்க