வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
வாணியம்பாடி அருகே கிராம மக்கள் சாலை மறியல்
வாணியம்பாடி அருகே தும்பேரி ஊராட்சியில் வேறு பகுதி மக்களுக்கு வீட்டுமனை வழங்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
தும்பேரி ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை வேறு பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதாக தகவலறிந்து வந்த அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து பேரி 200-க்கும் மேற்பட்டோா் திடீா் மறியலில் ஈடுபட்டனா். ஏற்கனவே, தும்பேரி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படவில்லை. அதற்கு மாற்று இடமும் வழங்கவில்லை. சுற்றுப்புறப் பகுதி மக்களுக்கு சுடுகாடு இல்லை, கால்நடை மருத்துவமனை இல்லை.
இந்நிலையில், வீட்டுமனை ஒதுக்க வருவாய்த் இடத்தை ஆய்வு செய்துள்ளனா். இதையடுத்து வேறு பகுதி மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று கூறி அவ்வழியாக வந்த அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அம்பலூா் போலீஸாா், வட்டாட்சியா் உமா ரம்யா தலைமையில் வருவாய்த் துறையினா் வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி வேறு பகுதிமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க மாட்டோம் என்று உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டனா்.
அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
