செய்திகள் :

வாணியம்பாடி: நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து - பொதுத்தேர்வுக்கு சென்ற +2 மாணவி ஓடிசென்று ஏறிய கொடுமை

post image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தில் இன்று காலை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவி ஒருவர் தனது கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து நிற்கவில்லை. மாணவி சீருடையில் இருப்பதை கவனித்தும் ஓட்டுநர் நிறுத்தாமல் பேருந்தை வேகமாக இயக்கினார்.

ஓடிசென்று ஏறிய மாணவி

பரீட்சைக்கு தாமதமானதால் பதறிப்போன மாணவி பேருந்துக்கு பின்னால் வேகமாக ஓடிசென்று பேருந்தில் ஏறினார். இந்த காட்சிகளை பின்னால் பைக்கில் வந்த நபர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த காட்சிகளை பார்க்கும்போது பதற வைக்கிறது.

`ஏதாவது விபரீதம் ஏற்பட்டிருந்தால்?’

``ஏதாவது விபரீதம் ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது? ஒருவேளை அந்த ஓட்டுநர் அல்லது நடத்துநரின் மகளாக இருந்தால், இவர்கள் இதுபோலத்தான் அநாகரிகமாக நடந்துகொள்வார்களா? அரசுப் பேருந்துகளில் இதுபோன்ற அவலங்கள் தொடர்கின்றன. சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கிராம மக்கள் கொதித்து பேசியிருக்கின்றனர்.

சஸ்பெண்ட்

இந்த நிலையில், ஓட்டுநர் முனிராஜை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். அதேபோல, நடத்துனர் அசோக் குமார் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தவர் என்பதால், அவர் பணியில் இருந்தே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அ... மேலும் பார்க்க

பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!

பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார். தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ப... மேலும் பார்க்க

`ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்ட 10 பேருக்கு HIV பாதிப்பு' - கேரளாவில் அதிர்ச்சி!

கேரள எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டி கடந்த இரண்டு மாதங்களாக சர்வே ஒன்றை நடத்தியது. அதன் முடிவு வெளியிடப்பட்ட நிலையில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.மலப்புறத்தில் ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்டுக்கொண்ட 10 பேருக்... மேலும் பார்க்க

கொடைக்கானல் காட்டேஜ் ஓனர் எரித்துக் கொலை; மதுரை இளைஞர் கைது - நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சரடி மெத்து பெருமாள்பள்ளத்தைத் சேர்ந்தவர் சிவராஜன் (58). இவர் அதேபகுதியில் காட்டேஜ் நடத்தி வந்தார். இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தினர் மதுரை அழகர்கோயி... மேலும் பார்க்க

மதுரை: டாஸ்மாக் மதுக்கடையில் தகராறு; போலீஸ்காரரை தாக்கி கொலை செய்த கும்பல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் முத்துக்குமார் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக கள்ளப்பட... மேலும் பார்க்க

கையில் ஏர் கன்னுடன் வீடுகளில் திருட நோட்டமிட்ட இளைஞர்கள்; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்- என்ன நடந்தது?

வீடுபுகுந்து திருடுவதற்கு ஏர் கன்னுடன் சுற்றிவந்த இளைஞரை பிடித்து கிராம மக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்ல... மேலும் பார்க்க