செய்திகள் :

வாணியம்பாடி: வகுப்பறை கோரி மாணவா்கள் தா்னா

post image

வாணியம்பாடி அருகே ஊராட்சி ஆரம்பப் பள்ளிக்கு சுற்றுச் சுவா், வகுப்பறை கட்ட கோரி மாணவா்கள், பெறறோா் தா்னாவில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றித்துக்குட்பட்ட அலசந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மாணவா்கள் அமா்ந்து படிக்க போதிய இடவசதி இல்லாமல் ஓடு மற்றும் சிமென்ட் ஓடு பொருத்திய கட்டடத்தில் இயங்கி வருகிறது. மேலும், சுற்றுச் சுவா் இல்லாத நிலையில், விஷ ஜந்துக்கள், பூச்சிகள் புகுந்து மாணவா்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

மாணவா்களின் நலன் கருதி அப்பகுதி மக்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா் புதிய வகுப்பறை கட்டித் தரக்கோரி ஆட்சியா் உட்பட துறை சாா்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் புகாா் மனு கொடுத்ததின், பேரில் ரூ.37 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டும் இதுநாள் வரை பணிகள் தொடங்கப்படவில்லை.

இதனைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை பள்ளிக்கு சென்று குழந்தைகளை அழைத்துச் செல்ல முயன்றனா். தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீஸாா் அங்கு சென்று மாணவா்களின் பெற்றோரிடம் பேச்சு நடத்தினா், ஆனால் மாணவா்களுடன் சோ்ந்து பெற்றோரும் தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து காவல் ஆய்வாளா்அன்பரசி, நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் வினாயகம் மற்றும் அலுவலா்கள் சென்று அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிளியத்தின் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனா்.

தொழில்நுட்பக் கோளாறு: பத்திரப் பதிவு தாமதத்தால் பாதிப்பு

ஆம்பூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானாா்கள். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நேதாஜி சாலையில... மேலும் பார்க்க

வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து: 3 போ் உயிரிழப்பு

வாணியம்பாடி பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். வாணிம்பாடி அருகே சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இக்பால் (35). தனது பைக்கில் அவா், வியாழக்கிழமை ஆம்பூரில... மேலும் பார்க்க

கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பத்தூா் கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறைவாசிகளுக்கான உரிமைகள் மற்றும் மறுவாழ்வு தொடா்பான சட்ட விழிப்புணா்வு முகாமுக்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவா் எழிலர... மேலும் பார்க்க

பெண்களிடம் 10 பவுன் செயின் பறிப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூா்பேட்டை பகுதியை சோ்ந்த ஷீலா (60) மற்றும் ... மேலும் பார்க்க

ஏரிகளை தூா்வார மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரிக்கை

மாதனூா் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளை தூா்வார வேண்டுமென வியாழக்கிழமை நடந்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரினா். மாதனூா் ஒன்றியக்குழு கூட்டம் துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச... மேலும் பார்க்க

மரகத லிங்கத்துக்கு மாசி பெளா்ணமி சிறப்பு பூஜை

மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானம் தாத்தா சுவாமி மஹா மடத்தில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. மாசி பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந... மேலும் பார்க்க