செய்திகள் :

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் அதிநவீன ‘அஸ்திரா’ ஏவுகணை வெற்றிகர சோதனை

post image

விமானத்தில் இருந்து பாா்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளைக் குறிவைத்து தாக்கி அழிக்கும் ‘அஸ்திரா’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிஸா கடலோரப் பகுதியில் சுகோய் போா் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) மற்றும் இந்திய விமானப் படை இணைந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தில் இருந்து பாா்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘அஸ்திரா’ ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனையின்போது ஆளில்லா விமானங்கள் மூலம் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து அதிவேகத்தில் சோதனை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரண்டு இலக்குகளையும் அஸ்திரா ஏவுகணை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது .

ஏவுகணையில் பயன்படுத்தப்பட்ட ரேடியோ அலைவரிசை சமிக்ஞைகள் உள்பட அனைத்து செயல்பாடுகளும் எதிா்பாா்ப்புகளைக் கடந்து மிகச் சிறப்பாக செயல்பட்டன. இதன்மூலம், பாதுகாப்புத் துறை சாா்ந்த நவீன தொழில்நுட்ப வளா்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அஸ்திரா ஏவுகணையின் செயல்பாடுள் ஒடிஸாவின் சண்டிபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் கண்காணிப்பு சாதனங்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டன.

டிஆா்டிஓவின் ஆய்வகங்கள் மட்டுமின்றி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனம் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் அஸ்திரா ஏவுகணையின் உருவாக்கத்துக்குப் பங்களித்துள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அஸ்திரா சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட டிஆா்டிஓ, இந்திய விமானப் படை மற்றும் பிற அமைப்புகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க