செய்திகள் :

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

post image

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) மற்றும் இந்திய ராணுவம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தரையிலிருந்து வான் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த ராணுவ பயன்பாட்டு ஏவுகணைகள் ஒடிஸா கடற்கரைக்கு அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்டது. ரேடாா் மற்றும் மின் ஒளியியல் கண்காணிப்பு நடைமுறைகள் மூலம் ஏவுகணையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வானில் உயா் வேகத்தில் செல்லும் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் 4 வகையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை வானில் குறுகிய தூரம், நீண்ட தூரம், உயரமான மற்றும் குறைந்த உயரத்தில் பறந்து செல்லும் இலக்குகளை இடைமறித்து தாக்கும் வகையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நான்கு சோதனைகளும் வெற்றி பெற்று ராணுவத்தின் செயல்திறனை நிரூபித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை ராணுவத்தின் பயன்பாட்டுக்காக டிஆா்டிஓ மற்றும் இஸ்ரேல் விண்வெளி ஆய்வு நிறுவனம் சாா்பில் கூட்டாக மேம்படுத்தப்பட்டதாகும். சோதனை வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மமதா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் ஜெயின் சமூகத்தினரிடையே பேசிய முதல்வர் மமதா பானர்ஜி, சிறுபான்மையின மக்களையும் அவர்... மேலும் பார்க்க

பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் எப்படியிருக்கிறார்?

சிங்கப்பூரில், பள்ளி இயங்கி வந்த கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 10 வயது சிறுமி பலியான நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண... மேலும் பார்க்க

ஜிப்லி புகைப்படம் வேண்டுமா? காவல்துறை எச்சரிக்கை

அண்மை நாள்களாக, ஜிப்லி செய்யறிவு கலை மூலம் தங்களது புகைப்படங்களை மாற்றி அந்த ஜிப்லி புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், நிச்சயமாக ஜிப்லி புகைப்படங்கள் வேண்டுமா என்று சிந்திக்குமாறும், ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் வேலையிழந்த ஆசிரியர்கள் போராட்டம்! போலீசார் தடியடி நடத்தியதாக குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் முறைகேடு புகாரில் வேலையிழந்த ஆசிரியர்கள் அந்த மாநில அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆசிரியர்​களை நியமனம் செய்​த​தில் முறை​கேட... மேலும் பார்க்க

ரூ. 63,000 கோடியில் 26 ரஃபேல் விமானங்கள்: மத்திய அரசு ஒப்புதல்!

இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த மாத இறுதியில்... மேலும் பார்க்க