செய்திகள் :

Bihar: ஒரே நாளில் நின்றுபோன ரூ.40 லட்சம் கடிகாரம்; ஸ்மார்ட் சிட்டி திட்டம் மீதெழுந்த விமர்சனம்!

post image

பீகார் மாநிலத்தில் திறக்கப்பட்ட ஒரே நாளில் ஓடாமல் நின்ற கடிகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் முக்கிய நகரம் பிகார் செரீப். இந்த நகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி செலவில் இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிகாரம் முதலமைச்சரின் பிரகதி யாத்திரை சமயத்தில் அவசர அவசரமாக கட்டப்பட்டது என டைனிக் பாஸ்கர் தளம் தெரிவிக்கிறது.

ஆனால் திறக்கப்பட்ட மறுநாளே திருடர்கள் கடிகாரத்தில் இருந்த காப்பர் வயர்களை திருடிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bihar கடிகார கோபுரத்தைத் திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

திறக்கப்பட்ட ஒரே நாளில் நின்றதனால் மட்டுமல்ல, அந்த கடிகாரத்தின் தோற்றத்துக்காகவும் சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டு வருகின்றது.

அந்த கடிகார கோபுரம் மிகவும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. தரமற்ற வர்ணப்பூச்சும், அரைகுறையாக முடிக்கப்பட்ட வேலைகளும் இணையவாசிகளால் தூற்றப்பட்டு வருகிறது.

"இந்த கடிகாரத்தில் அழகியலும் இல்லை, நவீனத் தன்மையும் இல்லை, அனைவரும் இதைத் திட்டித்தீர்க்கும்போது சிலர் நமக்கு ஏதோ கிடைக்கிறதே என மகிழவும் செய்கின்றனர்" என ஒரு சமூக வலைத்தள பயனர் தெரிவித்துள்ளார்.

இந்த கடிகார கோபுரத்தை மற்ற கடிகார கோபுரங்களுடன் ஒப்பிட்டும் பதிவுகள் வெளியாகி வருகின்றன.

NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* `வருங்கால முதல்வரே..!' - நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு* கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! - நயினார்* கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! - ... மேலும் பார்க்க

'பேச்சுவார்த்தைக்குத் தயார்!' - இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

வரி Vs வரிஇதுதான் தற்போது அமெரிக்கா - சீனாவிற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் ஒன்று. தேர்தலில் வெற்றிப்பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் முன்னரே, சீனா அமெரிக்காவிற்குள் போதை மருந்து கடத்தி வருகிறது... மேலும் பார்க்க

`புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மூடுவிழா’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு

2தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனம்...புதுச்சேரி லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது தொடர்பாக புதுச்சேரி தமிழார்வலர்கள... மேலும் பார்க்க

மேல்பாதி: சமூகப் பிரச்னையால் மூடப்பட்ட கோயில்; நீதிமன்ற உத்தரவால் திறப்பு... முழு பின்னணி!

அமைதிப் பேச்சு வார்த்தை தோல்விவிழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில். கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

`கொளுத்திடுவேன்...’ - மிரட்டிய ராணிப்பேட்டை திமுக நிர்வாகி; பறிபோன கட்சிப் பதவி; நடந்தது என்ன?

தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். ராணிப்பேட்டை சிப்காட் மெயின் குடோனிலிருந்து, அந்த மாவட்டத்தில் இருக்கிற அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபா... மேலும் பார்க்க