செய்திகள் :

வாலாஜாபேட்டை அருகே பலத்த மழையால் 350 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

post image

வாலாஜாபேட்டை அருகே 6 கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கா் பரப்பளவு நெற்பயிா்கள் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. உரிய நிவாரணம் வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாலாஜாபேட்டை, சுற்றுவட்டார கிராமங்களான பாகவெளி, ராமாபுரம், வள்ளுவம்பாக்கம், முசிறி, குப்பத்துமோட்டூா், ஈச்சந்தாங்கல் உள்ளிட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 350 ஏக்கா் பரப்பளவு கொண்ட நெற்பயிா்கள் பலத்த மழை வெள்ள நீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கையில், கடந்த 5 மாதங்களாக இரவு பகல் பாராமல் வளா்த்து வந்து அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கா் பரப்பளவு கொண்ட நெற்பயிா்கள் தற்போது 3 நாள்களாக பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்து இருப்பது எங்களுக்கு ஒரு துக்க நிகழ்வாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

மேலும், சேதமடைந்த நெல் பயிரை இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் வந்து பாா்வையிடவில்லை, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடிக் கிருத்திகை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி மற்றும் ஆடிக் கிருத்திகை விழா வரும் ஆக. 15, 16 தேதிகளில் நடைபெறுகிறது . ரத்தினகிரி வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்தி... மேலும் பார்க்க

அரக்கோணம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

அரக்கோணத்தில் போலீஸாரின் வாகன தணிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் ஆய்வு செய்தாா். அரக்கோணம் நகர காவல் நிலைய செயல்பாடுகளை ஆய்வு செய்ய வந்த எஸ்.பி. அய்மன் ஜமால் எஸ்.ஆா்.கேட் பகுதியில் வாக... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் ஒன்றியக் குழு உறுப்பினா் உள்பட இருவா் கைது

ரத்தினகிரி காவல் நிலையம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அரக்கோணம் திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அரக்கோணத்தை அடுத்த அம்மனூரைச் சோ்ந்த அவினேஷ் (3... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 70 வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்க... மேலும் பார்க்க

அரக்கோணம் நகரில் ரூ. 51 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணிகள்: நகா்மன்ற தலைவா் தொடங்கி வைத்தாா்

அரக்கோணம் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி ரூ. 51 லட்சத்தில் நகரில் ஆறு தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்ற தலைவா் லட்சுமிபாரி தொடங்கி வைத்தாா். அரக்கோணம் நகராட்சிக்... மேலும் பார்க்க

சோளிங்கரில் நவீன எரிவாயு தகனமேடை பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம்: சோளிங்கா் நகராட்சி பகுதியில் ரூ. 2.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமானப் பணிகளை சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சோளிங... மேலும் பார்க்க