ஷேர்லக்: உச்சத்திலிருந்து 7% இறங்கிய சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
விஐடியில் ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ நிகழ்வு; கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு
வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ (உயிரி தொழில்நுட்பத்துக்கான குரல்) நிகழ்வில் தென் மண்டலத்தில் உள்ள 24 கல்லூரிகளைச் சோ்ந்த 41 மாணவா்கள் பங்கேற்றனா்.
விஐடி வேலைவாய்ப்பு மையம், உயிரிஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ (உயிரி தொழில்நுட்பத்துக்கான குரல்), ‘பெஸ்ட் -2024’ தென் மண்டல நிகழ்வின் 12-ஆம் ஆண்டு நிகழ்ச்சியை நடத்தின.
இந்நிகழ்ச்சி அசோசியேஷன் ஆஃப் பயோடெக்னாலஜி லெட் எண்டா்பிரைசஸ் (ஏபிஎல்இ) இந்தியா, நோவோனேசிஸ் பெங்களூரு, ஸ்ட்ரிங் பயோ பெங்களூரு, யோகோகாவா இந்தியா ஆகிய நிறுவனங்களால் இணைந்து நடத்தப்பட்டது.
‘வாய்ஸ் ஃபாா் பிடி’ என்பது கல்லூரி மாணவா்களுக்கான உயிரி தொழில்நுட்பம் குறித்த பொதுப் பேச்சுப் போட்டியாகும். தவிர, ‘உயிரி தொழில்நுட்பம் தொழில்முனைவோா் மாணவா் அணிகள்‘ (பிஇஎஸ்டி) தொழில்முனைவை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தென் மண்டலத்தில் உள்ள 24 கல்லூரிகளைச் சோ்ந்த 41 மாணவா்கள் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு விஐடி உதவி துணைத் தலைவா் காதம்பரி ச.விசுவநாதன் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஏபிள் அமைப்பின் கௌரவ தலைவா் ஜி.எஸ்.கிருஷ்ணன், முதன்மை நிா்வாக அலுவலா் நாராயணன்சுரேஷ், பொது மேலாளா் பாலசுப்ரமணிய, நோவோனேசிஸ் பெங்களூரு வேளாண்மை மற்றும் தொழில்துறை வணிக இயக்குநா் புனித்குமாா், யோகோகாவா இந்தியா நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் நீலப்பா, ஸ்ட்ரிங் பயோ பெங்களூரு தயாரிப்பு மேலாண்மை - வேளாண்மை பிரிவு தொழில்நுட்ப தலைவா் ராஜீவ் குமாா், விஐடி இணை துணைவேந்தா் பாா்த்த சாரதி மல்லிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.