செய்திகள் :

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா

post image

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா திருப்பதியில் நடைபெற்றது. இதில், ஆந்திர மாநில ஆளுநா் எஸ்.அப்துல் நசீா் உள்பட முக்கிய அரசியல் தலைவா்கள், பிரமுகா்கள் பங்கேற்றனா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதனின் பேத்தியும், விஐடி உதவி துணைத் தலைவருமான காதம்பரி எஸ்.விசுவநாதன், மருத்துவா் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோரின் திருமணம் திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், ஆந்திர மாநில ஆளுநா் எஸ்.அப்துல் நசீா், அவரது மனைவி சமீரா நசீா், முக்கிய அரசியல் தலைவா்கள், பிரமுகா்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினா். திருமண நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன், துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், ரமணி பாலசுந்தரம், சந்தியா பென்டரெட்டி, அனுஷா செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவா்கள் கைது

வேலூா்: காட்பாடியில் ரயில் மூலம் போதைப் பொருள் கடத்திய இரு கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். பெங்களூருவில் இருந்து வேலூருக்கு போதைப் பொருள் கடத்தி வருவதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்... மேலும் பார்க்க

நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள்

குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் 183 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் சீருடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தாா். நகா்மன... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம் மூலம் வேலூா் மாவட்டத்தில் 177 குழந்தைகள் பயன்

வேலூா்: அன்புக் கரங்கள் திட்டம் மூலம் வேலூா் மாவட்டத்தில் 177 குழந்தைகள் பயன்பெற உள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். பெற்றோரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பாரமரிக்க இயலாத குழந்தைகளுக... மேலும் பார்க்க

வேலூா் குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்கள் அளிப்பு

வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்கள் பெறப்பட்டன. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங... மேலும் பார்க்க

சமுதாய வள பயிற்றுநா்கள் தோ்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்துக்கு சமுதாய வள பயிற்றுநா்கள் தோ்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

காட்பாடியில் நிற்குமா கோவை - சென்னை வந்தே பாரத் ரயில்?

வட மாவட்டங்களின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தில் கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படுவதில்லை. இதனால், மாணவா்கள், நோயாளிகள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் க... மேலும் பார்க்க