செய்திகள் :

'விஜய்யை பாஜக இழுக்க பார்க்கிறதா?' - 'Y' பிரிவு பாதுகாப்புப் பற்றி கே.பி.முனுசாமி விமர்சனம்

post image
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கும் 'Y' பிரிவு பாதுகாப்பை பற்றி விமர்சனத்தையும் பேசுபொருளாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றிய கருத்தையும் முன்வைத்தார்.
Vijay

விஜய் பற்றி பேசுகையில், 'விஜய்க்கு எந்த அடிப்படையில் மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது என தெரியவில்லை. விஜய் நடிகராக இருக்கிறார். ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறார். அவர் வருகின்ற இடத்திலெல்லாம் கூட்டம் கூடுகிறது. அதனால் பாதுகாப்புக்காக பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. அரசியல்ரீதியாக சுயநலமாக விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இந்த 'Y' பிரிவு பாதுகாப்பை கொடுத்திருக்கிறார்கள் என்றால், பா.ஜ.கவின் வரலாற்றை புரட்டிப் பாருங்கள் எது உண்மை என்பது உங்களுக்கே தெரியும்.' என்றார்.

செங்கோட்டையனை பற்றி பேசுகையில், 'செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயலலிதா அவருக்கு எந்தளவுக்கு மதிப்பும் மரியாதையும் அளித்தாரோ அதே அளவுக்கு எடப்பாடி பழனிசாமியும் அவரை மதிப்புடன் நடத்துகிறார்.

செங்கோட்டையன்

ஈரோடு முத்துசாமி போல இல்லாமல், அவர் கடைசி வரை அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்பார் என நம்புகிறேன்.' என்றார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Modi in US: `இந்திய குடியேறிகள்; தீவிரவாதம், அணுசக்தி' - மோடி, ட்ரம்ப் பேசியது என்ன?!

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக வசிக்கும் யாவரையும் இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்றும், ஆள்கடத்தலுக்கு முடிவு கட்டப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அமெரிக்காவில் குடியே... மேலும் பார்க்க

'தமிழ்த்தேசியவாதிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்ட ஒழுங்கு கெடுமா? - அரசுக்கு வேல்முருகன் கேள்வி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, 'தமிழ்த்தேசிய போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமா?' என அரச... மேலும் பார்க்க

Ranjith: "சாதியரீதியிலான வன்கொடுமைகளை அறிவீர்களா முதல்வரே?" - ஸ்டாலினிடம் பா.ரஞ்சித் கேள்வி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை குறிப்பிட்டு, "சாதியரீதியிலான வன்கொடுமைகளை அறிவீர்களா... மேலும் பார்க்க

"விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க காரணம்... மத்திய அரசு ஏஜென்ஸிகளின் ரிப்போர்ட்..." - அண்ணாமலை

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தேசிய இளைஞ... மேலும் பார்க்க

"என் தொகுதிக்கு வாங்க... ஒரு எம்எல்ஏ என்ன செய்ய முடியும் எனக் காட்டுகிறோம்" - வானதி சீனிவாசன்

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் 27வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் மலரஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய கோவை தெற்குதொகுதி எம்.எல்.ஏ-வும்... மேலும் பார்க்க