செய்திகள் :

விடுதிகளில் காவலா்கள் நியமிக்கக் கோரிய வழக்கு: ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

post image

மதுரையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் இரவு நேரக் காவலா்களை நியமிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, ஆதிதிராவிட நலத் துறையின் இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மானகிரியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஆதிதிராவிடா் பள்ளி, கல்லூரி விடுதிகளின் மேம்பாட்டுக்கு என அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் 57 விடுதிகள் உள்ளன. இதில், தூய்மைப் பணியாளா்கள் கிடையாது. மேலும், 23 விடுதிகளில் இரவு நேரக் காவலா் கிடையாது. போதிய பணியாளா்கள் இல்லாததால் பெரும்பாலான விடுதிகள் காலியாக உள்ளன.

குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு 5 விடுதிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றில் கூட இரவு நேரக் காவலா்கள் பணியில் இல்லை. இதனால் அவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடா்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆகவே, தமிழக ஆதிதிராவிட மாணவா் விடுதிகளில் துப்புரவுப் பணியாளா்கள், இரவு நேரக் காவலா்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : மனுதாரா் கோரிக்கை குறித்து ஆதிதிராவிட நலத் துறையின் இயக்குநா், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் இருவா், மாறுபட்ட தீா்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியா்கள்... மேலும் பார்க்க

சிறப்பு உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அருப்புக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (52). இவா் அருப்புக்கோட்டை க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம் இல்லை: பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூட வசதி செய்து தரக் கோரிய மனுவுக்கு, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றக் கோரிக்கை

பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற வேண்டும் என விஸ்வநாதபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கொலை, கொள்ளை, வழிப்பறி, விபத்து,... மேலும் பார்க்க

முருக பத்கா்கள் மாநாட்டில் நிபந்தனைகள் மீறல்

முருக பக்தா்கள் மாநாட்டில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு விதித்த நிபந்தனைகளை மீறிய இந்து முன்னணி அமைப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாநகரக் காவல... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செ... மேலும் பார்க்க