செய்திகள் :

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

post image

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அண்மையில் நடந்து முடிந்திருக்கின்றன. விரைவிலேயே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற புதுமையான யுக்தியை கையாண்டிருக்கின்றனர். விடைத்தாளுடன் ரூ.500 நோட்டு வைத்திருப்பது முதல் பல்வேறு கோரிக்கைகளை விடைத்தாள் வழியாக அதனைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு முன்வைத்துள்ளனர்.

அதில் மாணவர் ஒருவர், நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலைத் தொடருவேன், மற்றொரு மாணவர், தயவுசெய்து என்னைத் தேர்ச்சி பெறச் செய்யுங்கள், என் காதல் உங்கள் கைகளில் உள்ளது. மேலும் ஒரு மாணவர் ஐயா, இந்த 500 ரூபாயுடன் தேநீர் அருந்துங்கள், தயவுசெய்து என்னைத் தேர்ச்சிப் பெற வையுங்கள்.

இடிசிஐஎல் நிறுவனத்தில் ஆலோசகர் வேலை

இன்னொரு மாணவர், நீங்கள் என்னைத் தேர்ச்சி பெறவைத்தால், நான் உங்களுக்குப் பணம் தருகிறேன் என்று எழுதியுள்ளனர். சில மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்வது தேர்வு முடிவைப் பொறுத்தது என்று உணர்ச்சிவசப்பட்டு முறையிட்டுள்ளனர். அதில், நீங்கள் என்னைத் தேர்ச்சி பெற வைக்கவில்லை என்றால், பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுப்பமாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பார்க்கையில், தேர்வுக்கு நன்றாகப் படித்து திறமையை நம்பி தேர்வு அறைக்கு வந்த மாணவர்கள் மத்தியில் தற்போது இப்படியும் மாணவர்கள் உள்ளனரா என்கிற கேள்வி எழாமல் இல்லை.

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்துத் தாக்கிய இருவர் மீது வழக்கு!

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்துத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சே... மேலும் பார்க்க

பெங்களூரில் காவல்துறை முன்னாள் டிஜிபி படுகொலை! என்ன நடந்தது?

பெங்களூரு: கர்நாடக மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் வைத்தே கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று(ஏப். 20) அவரது உடலை போல... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கர்நாடக முன்னாள் டிஜிபி உடல் மீட்பு

கர்நாடக காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார். பெங்களூருவில் உள்ள அவரின் இல்லத்தில் உடலை மீட்ட, காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித... மேலும் பார்க்க

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க