சிங்கப்பூா்: சக ஊழியரின் காதைக் கடித்த இந்திய இளைஞருக்கு 6 மாத சிறை
விண்ணப்பித்துவிட்டீர்களா..?தேசிய சுகாதாரத் திட்டத்தில் வேலை!
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுபற்றிய விபரம் வருமாறு:
பணி: ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர்
காலியிடம் : 1
சம்பளம் : மாதம் ரூ.23,000
தகுதி: பேச்சு மற்றும் மொழி நோயியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: சிகிச்சை உதவியாளர் (பெண்)
சம்பளம் : மாதம் ரூ.13,000
தகுதி: தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் டிப்ளமோ நர்சிங் தெரபிஸ்ட் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 59-க்குள் இருக்க வேண்டும்.
பணி: இடைநிலை சுகாதாரப் பணியாளர்
காலியிடங்கள் : 23
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: செவிலியர் பட்டய படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 50-க்குள் இருக்கவேண்டும்.
பணி: பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், சுகாதார ஆய்வாளர்
காலியிடங்கள்: 12
சம்பளம் : மாதம் ரூ.14,000
தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 40 - க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.namakkal.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர், நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் - 637 003. தொலைபேசி எண்: 04286281424.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 4.7.2025 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.