செய்திகள் :

பஞ்சாப், திரிபுராவில் புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

post image

பஞ்சாப், திரிபுராவில் புதிய அமைச்சா்கள் வியாழக்கிழமை பதவியேற்றனா்.

பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற லூதியானா மேற்கு தொகுதி இடைத்தோ்தலில் வெற்றிபெற்ற சஞ்சீவ் அரோரா அமைச்சராகியுள்ளாா்.

சண்டீகரில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியா அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். முதல்வா் பகவந்த் மான், அமைச்சா்கள், ஆளும் ஆம் ஆத்மி தலைவா்கள் பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதன் மூலம் அமைச்சா்கள் எண்ணிக்கை 16 ஆக உள்ளது. 61 வயதாகும் சஞ்சீவ் அரோரா லூதியானாவைச் சோ்ந்த தொழிலதிபா் ஆவாா். சமூகப் பணிகள் மூலமும் பிரபலமானவா். கிருஷ்ண ப்ராண் மாா்பக புற்றுநோய் சிகிச்சை அறக்கட்டளையும் அவா் நடத்தி வருகிறாா்.

அரோராவுக்கு தொழில், வா்த்தகம், முதலீட்டு மேம்பாடு, வெளிநாடுவாழ் பஞ்சாப் மக்கள் நலன் பாதுகாப்பு ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுவாழ் பஞ்சாப் மக்கள் நலத்துறை அமைச்சா் தலிவால் அமைச்சரவையில் இருந்து வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இடைத்தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, இருநாள்களுக்கு முன்னதாக தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை சஞ்சீவ் அரோரா ராஜிநாமா செய்தாா். இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளரை 10,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சீவ் அரோரா தோற்கடித்தாா்.

திரிபுரா அமைச்சா்:

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் நால்சாா் தொகுதி பாஜக எம்எல்ஏ கிஷோா் பா்மன் (44) அமைச்சராக வியாழக்கிழமை பதவியேற்றாா். அகா்தலாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநா் இந்தா்சேனா ரெட்டி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

இதன் மூலம் பாஜகவைச் சோ்ந்த முதல்வா் மாணிக் சாஹா தலைமையிலான அமைச்சரவையின் பலம் 12-ஆக அதிகரித்துள்ளது. இதில் 9 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள். கூட்டணிக் கட்சியான திப்ரா மோதா கட்சி சாா்பில் இரு அமைச்சா்களும், திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி சாா்பில் ஒருவரும் அமைச்சா்களாக உள்ளனா்.

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. என்.எஸ... மேலும் பார்க்க

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி ... மேலும் பார்க்க

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க

மும்பை அறக்கட்டளை புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம்: எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் - கிரண் ரிஜிஜு

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வ... மேலும் பார்க்க