செய்திகள் :

சிங்கப்பூா்: சக ஊழியரின் காதைக் கடித்த இந்திய இளைஞருக்கு 6 மாத சிறை

post image

சிங்கப்பூரில் தன்னுடன் பணியாற்றி வரும் சக இந்திய ஊழியரின் காதைக் கடித்த குற்றத்துக்காக 21 வயது இந்திய இளைஞா் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தனியாா் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றும் செந்தில் குமாா் விஷ்ணுசக்தி (21) சக ஊழியரான நேசமணி ஹரிஹரனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் கைகலப்பாக மாறிய நிலையில் அவரது காதைக் கடித்துள்ளாா்.

கடந்த பிப்.15-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பணியாளா்கள் தங்குமிடத்துக்கு வந்த செந்தில்குமாா் தன்னுடைய செயல்பாடுகளைத் தொடா்ந்து கண்காணித்து நிறுவன மேலாளரிடம் நேசமணி தெரிவித்ததாக கூறி எச்சரித்துள்ளாா். இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது.

அப்போது நேசமணியின் இடது காதை செந்தில்குமாா் விஷ்ணுசக்தி விடாமல் கடித்ததில் காதுமடல் அறுந்தது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோதும் காதுமடலில் ஏற்பட்ட பாதிப்பை முழுவதுமாக குணப்படுத்த முடியவில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக சிங்கப்பூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது செந்தில்குமாருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. என்.எஸ... மேலும் பார்க்க

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி ... மேலும் பார்க்க

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க

மும்பை அறக்கட்டளை புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம்: எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் - கிரண் ரிஜிஜு

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வ... மேலும் பார்க்க