விண்ணப்பித்துவிட்டீர்களா..? 13,217 வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!
வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அரசுடமையமாக்கப்பட்ட வங்கிகளில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான 13,217 வங்கி அலுவலர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு வங்கி பணியே நோக்கமாக கொண்டு படித்து வரும் தகுதியான இருபாலர்களிடமிருந்து நாளைக்குள்(செப்.21) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது.
ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை ஐபிபிஎஸ் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன.
மொத்த காலியிடங்கள்: 13,217
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Office Assistants (Multipurpose) - 7,972
பணி: Officer Scale I – 3,907
பணி: Officer Scale II (General Banking Officer) – 854
பணி: Officer Scale II (IT) – 87
பணி: Officer Scale II (CA) – 69
பணி: Officer Scale II (Law) – 48
பணி: Officer Scale II (Treasury Manager) – 16
பணி: Officer Scale II (Marketing Officer (MO)) – 15
பணி: Officer Scale II (Agriculture Officer) – 50
பணி: 10. Officer Scale-III (Senior Manager) – 199
தமிழ்நாடு கிராம வங்கி காலியிட விவரங்கள்:
பணி: Office Assistants (Multipurpose) – 468
பணி: Officer Scale I – 200
பணி: Officer Scale II (IT) – 12
பணி: Officer Scale II (CA) – 2
பணி: Officer Scale II (Marketing Officer (MO)) – 4
பணி: Officer Scale II (Agriculture Officer) – 2
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், சிஏ, வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் அல்லது கணக்கியல் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21.9.2025 தேதியின்படி 18 முதல் 28, 30, 32, 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதி முறைப்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி ஆண்டுகளும், விதவைகள், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமும், முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு மூலமும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வங்கி வாரியாக காலியிடங்கள், தேர்வு பாடத்திட்டம், நேரம் மற்றும் மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி.
முதன்மைத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை மற்றும் திருநெல்வேலி
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.850. இதர பிரிவினர்களுக்கு ரூ.175.
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.9.2025
முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர் -2025
முதன்மைத் தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் - 2025, ஜனவரி - 2026
தேர்வு முடிவுகள் உத்தேசமாக வெளியிடப்படும் மாதம்: ஜனவரி - 2026
நேர்முகத்தேர்வு நடைபெறும் மாதம்: ஜனவரி, பிப்ரவரி - 2026
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.