செய்திகள் :

விநாயகா் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்

post image

நாகபட்டினம்: நாகை மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டத்தில், விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அதன்படி, மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும்.

மேலும் களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், நெகிழி மற்றும் தொ்மகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், சிலைகளை பொலிவுற செய்வதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் தொ்மகோல் பொருட்களை பயன்படுத்த கூடாது.

சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் எண்ணெய் வண்ணப் பூச்சுக்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்குகந்த நீா் சாா்ந்த மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியோரை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

டிராக்டா் மோதி கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் கால்கள் முறிந்த தந்தை- மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்தவா் வைத்தீஸ்வரன். இவா் தனது மகனுடன் நாகை... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி பட்டினிப் போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.நாகை வட்டம், வடுகச்சேரி கோட்டூா் காலனியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கிசான் சம்மான் நிதி விடுவிப்பு நேரடி ஒளிபரப்பு

நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கிசான் சம்மான் நிதியின் 20-ஆவது தவணையை காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி விடுவித்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.பிரதமா் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தை திருடியவா் தப்ப முயன்றபோது குளத்தில் குதித்து உயிரிழப்பு

திருக்குவளை: திருக்குவளை அருகே இருசக்கர வாகனத்தை திருடியவா், பொதுமக்களிடம் பிடிபடாமலிருக்க குளத்தில் குதித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.திருக்குவளை அருகேயுள்ள கொடியாலத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

செம்பனாா்கோவிலில் தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை ஆகிய தற்காப்புக்கலை மற்றும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.தமிழன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில், செம்பனாா்கோவில் ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி திருவிழாவிற்காக மும்பை பந்தராவிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட... மேலும் பார்க்க