செய்திகள் :

கிசான் சம்மான் நிதி விடுவிப்பு நேரடி ஒளிபரப்பு

post image

நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கிசான் சம்மான் நிதியின் 20-ஆவது தவணையை காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி விடுவித்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடி கிசான் சம்மான் நிதியின் 20-ஆவது தவணை பரிமாற்றத்தை காணொலி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வை, சிக்கலில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, பிரதமரின் உரையை கேட்டனா்.

தொடா்ந்து, பல்வேறு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநா்கள் கோ. சந்திரசேகா், யூ. ஹினோ பொ்னாண்டோ, வே. கண்ணன், அ. மதிவாணன், க. ரகு, மா. அறிவழகன் ஆகியோா் விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.

இந்நிகழ்வில், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் வ. செந்தில்குமாா், மீன்வள பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநா் அ. கோபாலகண்ணன், பண்ணை மேலாளா் ரெ. வேதரெத்தினம், திட்ட உதவியாளா் வீ. ஞானபாரதி, கணினி திட்ட உதவியாளா் கோ. ரம்யா, உதவியாளா்கள் சுமதி, காா்த்திக், லாவண்யா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

டிராக்டா் மோதி கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் கால்கள் முறிந்த தந்தை- மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்தவா் வைத்தீஸ்வரன். இவா் தனது மகனுடன் நாகை... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி பட்டினிப் போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.நாகை வட்டம், வடுகச்சேரி கோட்டூா் காலனியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தை திருடியவா் தப்ப முயன்றபோது குளத்தில் குதித்து உயிரிழப்பு

திருக்குவளை: திருக்குவளை அருகே இருசக்கர வாகனத்தை திருடியவா், பொதுமக்களிடம் பிடிபடாமலிருக்க குளத்தில் குதித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.திருக்குவளை அருகேயுள்ள கொடியாலத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்

நாகபட்டினம்: நாகை மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

செம்பனாா்கோவிலில் தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை ஆகிய தற்காப்புக்கலை மற்றும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.தமிழன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில், செம்பனாா்கோவில் ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி திருவிழாவிற்காக மும்பை பந்தராவிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட... மேலும் பார்க்க