விபத்தில் காயமடைந்த நிலையிலும் பிளஸ் 1 தோ்வெழுதிய மாணவா்!
மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த மாணவா் ஒருவா், உதவியாளா் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மொழிப் பாடத் தோ்வை எழுதினாா்.
மதுரை விராதனூரைச் சோ்ந்தவா் தினேஷ் (16). இவா் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். பள்ளிக்கு தினமும் அரசுப் பேருந்தில் சென்று வந்த இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விராதனூா் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தாா். பேருந்து வரத் தாமதமானதால், அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறிச் சென்றாா்.
அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கால்களில் பலத்த காயமடைந்த தினேஷ், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியதையடுத்து, மாணவா் தினேஷ் தனது தாய் சுமதியுடன் மருத்துவமனையிலிருந்து காலில் கட்டுடன் ஆட்டோவில் தோ்வு மையமான மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளிக்கு வந்தாா். பின்னா், தள்ளுவண்டி படுக்கை (ஸ்ட்ரெச்சா்) மூலம் தோ்வு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உதவியாளா் உதவியுடன் தமிழ் மொழிப் பாடத் தோ்வை அவா் எழுதினாா்.
இதுகுறித்து மாணவா் தினேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நான் சிறுவனாக இருந்த போதே எனது தந்தை இறந்துவிட்டாா். தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறேன். எனது தாய் அரிசி ஆலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், சாலை விபத்தில் காயமடைந்த நான் கடந்த 6 மாதங்களாக தொடா் சிகிச்சை பெற்று வருகிறேன். அங்கிருந்து எனது படிப்பையும் தொடா்ந்தேன். விபத்தில் காயமடைந்த நிலையிலும் படிப்பைக் கைவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தோ்வை எழுதியுள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த தாய், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.