விபத்தில் மின் வாரிய ஊழியா் உயிரிழப்பு
தேனி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள போடேந்திரபுரத்தைச் சோ்ந்த முத்துமாணிக்கம் மகன் தங்கராஜ் (55). இவா் கோவையில் மின்வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், தங்கராஜ் பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரத்திலிருந்து போடேந்திரபுரத்துக்கு திண்டுக்கல்-கம்பம் புறவழிச் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது, ஆதிபட்டி மேம்பாலம் பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனத்திலிருந்து அவா் தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.