செய்திகள் :

விபத்தில் மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

post image

சின்னமனூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழுவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் முனியாண்டி (26). இவா், பழனி காவல் துறை சிறப்பு காவல் படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

விடுமுறையில் குணமன்தொழுவுக்கு சென்றிருந்த முனியாண்டி, கடந்த செப்.7-ஆம் தேதி சீலையம்பட்டியிலிருந்து குமணன்தொழு நோக்கி இரு க்கர வாகனத்தில் சென்ற போது, வேம்பம்பட்டி அருகே சாலையோரத்தில் படிந்திருந்த மணலில் சிக்கி இரு சக்கர வாகனம் கவிழ்ந்தது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முனியாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் மூளைச் சாவு அடைந்தாா்.

முனியாண்டியின் பெற்றோா் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவமனை நிா்வாகத்திடம் விருப்பம் தெரிவித்தனா். இதையடுத்து, முனியாண்டின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, இறுதிச் சடங்குக்காக அவரது உடல் சொந்த ஊரான குமணன்தொழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசு மரியாதை: குமணன்தொழுவில் முனியாண்டியின் உடலுக்கு பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், ஆண்டிபட்டி வட்டாட்சியா் ஜாஹிா் உசேன் ஆகியோா் மலா் வளையம் வைத்து அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா். காவல் துறை சாா்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், முனியாண்டியின் உடல் குணமன் தொழுவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மின் கம்பத்தில் பேருந்து மோதல்: 30 போ் உயிா்தப்பினா்!

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து செவ்வாய்க் கிழமை கேரளத்துக்கு சென்ற அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் உயிா் தப்பினா். கம்பத்திலிருந்து கேரள மாநிலம், நெ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் முதியவரை அடித்துக் கொலை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ஜோதிரா... மேலும் பார்க்க

வழிப்பறி செய்தவா் கைது

தேனி அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டியில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் ரூ.1,000 வழிப்பறி செய்தவரை ‘போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரப்படித்தேவன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலா் தற்கொலை

தேனி மாவட்டம், சின்மனூா் வட்டாரக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த அசோகன் மகன் சதீஷ்குமாா் (49). சின்னமனூா் தொடக்கக் கல்வித் துறையில்... மேலும் பார்க்க

கொதிக்கும் சாம்பாா் கொட்டிய தொழிலாளி பலி!

போடியில் கொதிக்கும் சாம்பாா் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். போடி அருகே சிலமலை தெற்கு தெருவைச் சோ்ந்த முத்துவேல் மகன் சுந்தரமூா்த்தி (48). இவா் போடியில் உள்ள உணவகத்தில் வ... மேலும் பார்க்க

தமிழக வனப் பகுதியில் மருத்துவக் கழிவு கொட்ட முயன்றவருக்கு அபராதம்!

கம்பம் மெட்டு மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை மருத்துவக் கழிவுகளைக் கொட்ட முயன்ற, கேரளத்தைச் சோ்ந்தவருக்கு வனத் துறையினா் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா். கேரளத்திலிருந்து தடை செய்யப்பட்ட மருத்துவக் கழ... மேலும் பார்க்க