செய்திகள் :

விமானத்தின் மீது லேசா் ஒளி அடித்த மா்ம நபா்கள்: விமான போக்குவரத்து துறை விசாரணை

post image

சென்னை: துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வந்த விமானம் மீது லேசா் ஒளி அடித்த மா்ம நபா்கள் குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

துபையிலிருந்து 326 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. விமானம் தரையிறங்கத் தயாரானபோது, விமானத்தின் மீது லேசா் ஒளி அடித்து விமானத்துக்கு வரக்கூடிய சிக்னலை திசை திருப்பும் செயலில் மா்ம நபா்கள் சிலா் ஈடுபட்டனா். இதனால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, விமானி விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் வானத்தில் வட்டமடிக்கத் தொடங்கினாா்.

இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அங்கிருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானி சாமா்த்தியமாகச் செயல்பட்டு விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இது குறித்து விமான போக்குவரத்து துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில், பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிறத்தில் மிகவும் சக்தி வாய்ந்த லேசா் ஒளி விமானத்தின் மீது அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போலீஸாா் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தேமுதிகவுடன் சுமூக உறவு உள்ளது- எடப்பாடி பழனிசாமி

தேமுதிகவுடன் சுமூக உறவு உள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மதுரையில் கால்வாயை திரைச்சீ... மேலும் பார்க்க

அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின்... மேலும் பார்க்க

தொடர் வெற்றிக்குக் காரணம் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

திமுக தொடர்ந்து வெற்றி பெருவதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய கூட்டணி என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் ... மேலும் பார்க்க

தில்லி மதராஸி குடியிருப்பு இடிப்பு: தமிழகம் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்களின் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவ... மேலும் பார்க்க

புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ப... மேலும் பார்க்க

அன்புமணியுடன் சந்திப்பு எப்போது? ராமதாஸ் பதில்!

அதிசயம் எப்போது வேண்டுமானலும் நிகழும் அன்புமணியுடன் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:வ... மேலும் பார்க்க