செய்திகள் :

விமான நிலையக் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம்

post image

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் புதிதாய் பிறந்த குழந்தை இருப்பதாக விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, குப்பைத் தொட்டியில் இருந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. இருப்பினும், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விமான நிலையத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை விசாரித்து வருகின்றனர். விமான நிலையத்துக்கு வந்து சென்ற பயணிகளின் விவரங்கள் மட்டுமின்றி, மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை!

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி

தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு

புது தில்லி: இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பரில் 64,870 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நிய கடன் ஒரே ஆண்டில் 10 ... மேலும் பார்க்க

கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்: சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம்

பிலாஸ்பூா்: கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமா்சனம்

புது தில்லி: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா். ‘மத்தியில் அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமா... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாா்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயாா் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெர... மேலும் பார்க்க