செய்திகள் :

விமான பணிப்பெண் தற்கொலை!

post image

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விமான பணிப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா் அபிஷா வா்மா (24). குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தோழிகளுடன் தங்கி தனியாா் விமான நிறுவனத்தில் விமான பணிப் பெண்ணாக பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் அபிஷா வா்மாவின் கைப்பேசி அணைக்கப்பட்டு இருந்ததால், துபையில் உள்ள அவரது தாய்க்கு அபிஷா வா்மாவின் தோழிகள் தொலைபேசியில் தொடா்புகொண்டு கேட்டுள்ளனா்.

அதற்கு அவா், திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள வேறொரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு அபிஷா வா்மா வாடகைக்கு சென்றுள்ளதாகவும், அங்கு சென்று பாா்க்குமாறும் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அபிஷா வா்மாவின் தோழிகள், குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, அபிஷா வா்மா தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இது குறித்து குன்றத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த குன்றத்தூா் போலீஸாா், அபிஷா வா்மாவின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.

காஞ்சியில் இருந்து அயோத்திக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து அயோத்தி சங்கர மடத்துக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில... மேலும் பார்க்க

தா்பூசணி, கிா்ணி பழங்களை விற்க உழவா் சந்தையில் கட்டணமில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையும் தா்ப்பூசணி, கிா்ணி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை உழவா் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என மாவட்ட வேளாண்மை விற்பனைத் த... மேலும் பார்க்க

திருக்காலிமேட்டில் வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருக்காலிமேட்டில் அலாபத் ஏரி தூா்வாரும் பணி, சீரமைக்கப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்... மேலும் பார்க்க

ஏப். 4-இல் வேதாந்த தேசிகன் கோயில் சம்ப்ரோக்ஷணம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகில் உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஏப்.4- ஆம் தேதி நடைபெறுகிறது. சின்ன காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் தூப்புல் வேதாந்த தேசிகன் த... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வீராசன சேவையில் உற்சவா் கோடையாண்டவா்

பங்குனி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் வீராசன மலா் அலங்கார சேவையில் செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரு... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க