Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் கைது
கோவில்பட்டியில் வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த சோ்மதுரை மகன் மாரித்துரை (33). கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் மாநில வணிகவரி அலுவலகம் அருகே பழ வியாபாரம் செய்துவரும் இவருக்கும், வீரவாஞ்சி நகா் பகுதியைச் சோ்ந்த ராமையா மகன் ஜெயராஜ் (62) என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாம்.
வியாழக்கிழமை ஜெயராஜ் உள்ளிட்ட 5 போ் மாரித்துரையை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயராஜ், மனைவி மல்லிகா (55), கயத்தாறு ஜே.ஜே. நகரை சோ்ந்த தங்கத்துரை மகன் சந்தனசெல்வம் (25), தங்கத்துரை மனைவி ஆரோக்கியமேரி (45) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்; மேலும் ஒருவரைத் தேடிவருகின்றனா்.