செய்திகள் :

விராட் கோலிக்காக சின்னசாமி திடலை வெண்மையாக்கிய ரசிகர்கள் ஏமாற்றம்!

post image

பெங்களூரு ரசிகர்களின் நெகிழ்ச்சியான செயல் குறித்து ஐபிஎல் நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 58-ஆவது போட்டி நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி திடலில் ஆர்சிபி-கேகேஆர் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது.

இந்தப் போட்டிக்காக விராட் கோலி ரசிகர்கள் வெள்ளை நிற ஜெர்ஸிக்களை அணிந்து வந்தார்கள்.

சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனால், கோலியை கௌரவிக்கும் பொறுட்டு வழக்கமான ஆர்சிபியின் சிவப்பு நிற ஜெர்ஸியை அணியாமல் வெள்ளை நிறத்தில் அணிந்து வந்தார்கள்.

ரசிகர்கள் கோலியின் ஆட்டத்தை பார்க்க மிகுந்த ஆவலில் இருந்தார்கள். ஆனால், மழைக் குறுக்கிட்டதால் டாஸ் சுண்டப்படாமலேயே போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் சின்னசாமி திடலை விட்டுச் சென்றார்கள்.

சின்னசாமி திடலை வெண்மை நிறமாக்கிய ஆர்சிபி ரசிகர்களின் அன்பை விடியோவாக வெளியிட்டு ஐபிஎல் நிர்வாகம் பதிவிட்டுள்ளது. இந்த விடியோவை ஆர்சிபி, கோலி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டதால் கேகேஆர் தொடரிலிருந்து வெளியேறியதும், ஆர்சிபி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்குச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

கே.எல்.ராகுல் சதம் விளாசல்: குஜராத் டைட்டன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ்... மேலும் பார்க்க

ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வ... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும்... மேலும் பார்க்க

மழையால் கைவிடப்பட்ட போட்டி; டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் ஆர்சிபி!

மழையால் கைவிடப்பட்ட போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பியளிக்கப்படும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் ராயல் சேலஞ்... மேலும் பார்க்க

நேஹல் வதேரா, ஷஷாங் சிங் அதிரடி: ராஜஸ்தானுக்கு 220 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 219 ரன்கள் குவித்தது.ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில் மோதிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பவ... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியிலேயே டக்கவுட்டான மிட்செல் ஓவன்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஓவன் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கியவர் ரன் ஏதும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில்... மேலும் பார்க்க