செய்திகள் :

விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!

post image

விராலிமலை அருகே திருநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் வலையில் போதுமான மீன்கள் வலையில் கிடைக்காததால் கரையில் காத்திருந்த மீன் பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

விராலிமலை பகுதி குளங்களில் நிகழாண்டுக்கான மீன்பிடித் திருவிழா தொடங்கியதால் கிராமத்து அசைவ மீன் பிரியர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த வகையில் திருநல்லூரில் சனிக்கிழமை காலை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பெருமளவு மீன்கள் வலையில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிச்சியது.

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
மீன் பிடித் திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள திருநல்லூர் பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் விரால், கெண்டை,கட்லா,குறவை உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து செல்லலாம் என்று வந்த மீன் பிடியாளர்களின் வலையில் மீன் சிக்காமல் முள் செடிகளும், பாசிகளும் மட்டுமே சிக்கியது.

பொதுவாக மீன்பிடி திருவிழாவின்போது ஒரு குளத்தில் சுமார் 100-300 கிலோ வரை மீன்கள் கிடைக்கும். ஆனால் இங்கு சுமார் 25 கிலோ வரையிலான மீன்களே கிடைத்தன. இதற்கு காரணம் இரவு நேரங்களில் தூண்டில் மூலம் சிலர் மூன்களை பிடித்து சென்று விடுவதால் மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்கவில்லை என்றனர் மீன்பிடியாளர்கள்.

அதிகாலை முதல் காரை மீது காத்திருந்து அனுமதிக்கு பின்னர் குளத்துக்குள் இறங்கி வலையை வீசிய போதும் மீன்கள் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடனே கரை திரும்பியதாக மீன்பிடியாளர்கள் கவலை தெரிவித்தனா். இதனால் மீன் பிரியர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஃபோஸ்டர் மொஹாலே கூற... மேலும் பார்க்க

மசூதியில் குண்டு வெடிப்பு: தலைமை இமாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவாவின் மொந்ஷேரா மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அம்பலா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.1) வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜராகியுள்ளார். அப்போது... மேலும் பார்க்க

அசாம்: ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.சாச்சார் மாவட்டத்தில... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலியுறுத்தல்!

மொராக்கோவில் பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியான சூழ... மேலும் பார்க்க

பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் சுட்டுப்பிடிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் மக்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவரை காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர். பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்திலுள்ள காகார் பாலத்தின் அருகில் கோல்டி ப... மேலும் பார்க்க