Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
விருதுநகர்: 'இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம்' - இரிடியம் மோசடியில் அதிமுகவினர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சி அ.தி.மு.க 8 வது வார்டு கழகச் செயலாளர் பட்டுராஜன் (52), அ.தி.மு.க உறுப்பினர்கள் கந்தநிலா (55), ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் இணைந்து தனியார் அறக்கட்டளை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன் தன்னிடம் ரூபாய் 1 கோடியே 38 லட்சம் இரிடியம் மோசடி செய்ததாக சி.பி.சி.ஐ.டி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதன் பெயரில் தனியார் அறக்கட்டளை நடத்தி வருகிற பட்டுராஜன், கந்தநிலா, ராணி நாச்சியார் ஆகிய மூவர் மீதும் விருதுநகர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அதிகாலை விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஐயப்பன் வீட்டில் ஆஜர்படுத்தினர். 15 நாள் காவலில் அடைக்க நீதித்துறை நடுவர் ஐயப்பன் உத்தரவிட்டார்.
இரிடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன் சேத்தூர் பேரூராட்சி 8 வது வார்டு கழகச் செயலாளராகவும், செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளராகவும், சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராகவும் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

















