செய்திகள் :

விரைவில் ஏடிஎம் மையத்திலிருந்து பிஎஃப் பணம் எடுக்கும் வசதி!

post image

ஹைதராபாத்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 'ஈபிஎஃப்ஓ 3.0' என்ற புதிய முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை நேரடியாக ஏடிஎம்களிலிருந்து பெற அனுமதிக்கும்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த குறித்து தெரிவித்தார். புதிய அமைப்பு பரிவர்த்தனைகளை எளிதாக்க பல டிஜிட்டல் அம்சங்களுடன் வங்கி போன்ற வசதியை இது வழங்கும்.

வரும் நாட்களில் 'ஈபிஎஃப்ஓ 3.0' பதிப்பு வரும். வங்கியில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதைப் போலவே, உங்களிடம் உள்ள உங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணை வைத்து நீங்கள் இதில் எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.

இந்த மேம்படுத்தலின் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்கள் இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்லவோ அல்லது தங்கள் வருங்கால வைப்பு நிதி பணத்தை அணுக தங்கள் நிறுவனத்திடமிருந்து ஒப்புதல்களைப் பெறவோ வேண்டியதில்லை.

உறுப்பினர்கள் இனி அவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதைப் போலவே, ஏடிஎம் மூலம் தங்கள் பணத்தை எடுக்க முடியும். அதே வேளையில், சந்தாதாரர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணை பயன்படுத்தி தங்கள் கணக்குகளை நிர்வகிக்க முடியும்.

பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல சீர்திருத்தங்களை செய்து வருகின்ற நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சேவைகள் குறித்த புகார்கள் குறைந்துள்ளன.

விரைவான செயலாக்கம், பெயர் திருத்தம் மற்றும் எந்தவொரு வங்கியிலிருந்தும் ஓய்வூதியம் பெறுதல் ஆகிய புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: 4 நிறுவனங்களுக்கு ரூ.76.6 லட்சம் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

டிரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பேற்றதுமுதல் சரியும் எலான் மஸ்க்!

அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 7வது வாரமாகத் தொடர்ந்து சரிந்துள்ளது. டெஸ்லாவின் மதிப்பு கடந்த வாரத்தில் 10% சரிந்த நிலையில், இதுவரை 800 பில்லியன் டாலர் (6.9... மேலும் பார்க்க

இந்தியாவில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய ஹையர் நிர்ணயம்!

நொய்டா: ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர் விற்பனை நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.வீட்டு உபகரணங்கள் தயாரிப்பாளரான ஹையர், புதிய ஏசி உற்பத்தி மற்றும் ... மேலும் பார்க்க

மகளிருக்கான சிறப்பு கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து வங... மேலும் பார்க்க

மின்சாரக் காா்களின் விற்பனை 19% அதிகரிப்பு

இந்தியாவில் மின்சார பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 18.95 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பத... மேலும் பார்க்க

சக்கைப்போடு போடும் 7-சீட்டர் கார் இதுதான்! விலைக்காகவே வாங்கலாம்!!

இந்திய வாகனச் சந்தையில், 7 இருக்கை வசதிகொண்ட கார்களின் தகப்பன் என்று சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றிருக்கிறது மாருதி சுசூகி எர்டிகா.இந்தியாவில், எப்போதும் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து செல்லும் அளவுக்கு ... மேலும் பார்க்க

ஹூண்டாய் விற்பனை 3% சரிவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் 3 ரிந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்... மேலும் பார்க்க