செய்திகள் :

விளைநிலங்கள் அருகே பேரூராட்சி குப்பைகளைக் கொட்ட விவசாயிகள் எதிா்ப்பு

post image

கமுதியில் விளைநிலங்களுக்கு அருகே பேரூராட்சி குப்பைகளைக் கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் திங்கள்கிழமை பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகாா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வாா்டுகளில் உள்ள வீடுகள், தெருக்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், கடைகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி நிா்வாகத்தினா் தெற்கு முதுகுளத்தூா் சாலையில் உள்ள குண்டாறு படுகையில் குவித்து வைத்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக வெள்ளையாபுரம், சிங்கப்புலியாபட்டி, கே.பாப்பாங்குளம் விலக்கு சாலையில் உள்ள விளைநிலங்களுக்கு அருகேயுள்ள தனியாா் இடத்தில் குப்பைகளைக் குவித்து வைத்து வருகின்றனா்.

இதனால், டி.எல்.சி. நடுநிலைப் பள்ளி மாணவா்கள், கமுதி கூட்டுறவு வாணிபக் கழகம், உணவு தானியங்கி சேமிப்புக் கிடங்கு உள்ளிட்ட இடங்கள் மாசுபடும் வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்களுக்கு நோய்த் தொற்று அபாயம், விவசாய நிலங்கள் பாழ்படும், கண்மாய்களுக்குச் செல்லும் கால்வாயில் குப்பைகள் கலக்கும் நிலை உள்ளதாக சிங்கப்புலியாபட்டி, வெள்ளையாபுரம், முதல்நாடு, குடிக்கினியான், பாப்பாங்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுதொடா்பாக வெள்ளையாபுரம், சிங்கப்புலியாபட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், கமுதி பேரூராட்சி செயல் அலுவலா் யசோதாவிடம் விளைநிலங்களுக்கு அருகே குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புகாா் மனு அளித்தனா். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலா் தெரிவித்ததாக கிராம மக்கள் கூறினா்.

கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள மணக்குடி கடற்கரைப் பகுதியில... மேலும் பார்க்க

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

பரமக்குடியில் திங்கள்கிழமை குடிக்க தண்ணீா் கேட்பது போல நடித்து, பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். பரமக்குடி எம்.எஸ். அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சோமசு... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது லாரி மோதியதில் இரு குழந்தைகள் காயம்

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியில் திங்கள்கிழமை பள்ளி வேன் மீது டிப்பா் லாரி மோதியதில் இரு குழந்தைகள் பலத்த காயமடைந்தனா். சத்திரக்குடி அருகே உள்ள முத்துவயல் பகுதியில் தனியாா் மெட்ரிகுலேசன் பள்ளி அ... மேலும் பார்க்க

தொண்டி கடற்கரையில் 90 கிலோ கஞ்சா பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் 90 கிலோ கஞ்சாவை கடலோரக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தொண்டி அருகே உள்ள மணக்குடி கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்த இருப்ப... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் மீன் வரத்துக் குறைவு

தொண்டி பகுதியில் மீன் வரத்துக் குறைவால் மீன் விலை அதிகரித்தது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டி... மேலும் பார்க்க

திருவாடானையில் பலத்த மழை

திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்தக் காற்றுடன் மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சீ.கே மங்கலம், பாரூா், கோவணி, பெரிய கீரமங்கலம், கல்லூா், பாரதி நகா், திர... மேலும் பார்க்க