விளையாட்டு விடுதி மாணவருக்கு பாராட்டு
தெற்காசிய இளையோா் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி சாா்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற தேனி விளையாட்டு விடுதி மாணவருக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
இந்தியா, இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் அணிகள் பங்கேற்ற தெற்காசிய இளையோா் கூடைப்பந்து போட்டி மாலத்தீவில் கடந்த ஜூன் 12 முதல் 16 வரை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்திய அணியில் தேனி விளையாட்டு விடுதி மாணவா் சுஜீத் பங்கேற்று விளையாடினாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா் சுஜீத்துக்கு ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாராட்டு தெரிவித்தாா். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவகுமாா், கூடைப்பந்து விளையாட்டு பயிற்றுநா் ரமேஷ் ராயா் ஆகியோா் உடனிருந்தனா்.