செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

post image

கோடை விடுமுறைக்குப் பிறகு, விழுப்புரம் மாவட்டத்தில் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்காக திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் பள்ளிகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கோடை விடுமுறை ஜுன் 1- ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து, ஜூ ன் 2 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தூய்மைப் பணிகள்: இந்த நிலையி ல் பள்ளிகளில் கட்டடங்கள். கழிப்பறைகள் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியிருந்தது. இதன்படி மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பள்ளிகள் திறப்பு: கோடை விடு முறையைத் தொடர்ந்து, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, முழுமையாக மற்றும் பகுதியளவில் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பிரிவு பள்ளிகள் என 747 பள்ளிகள் திறக்கப்பட்டன.

அந்தந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்று தங்களது பழைய, புதிய நண்ப ர்கள், தோழிகளைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

பாடநூல்கள் வழங்கல்: விழுப்புரம் மாவட்ட அரகண்ட நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் க . பொன்முடி எம்.எல்.ஏ, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெ ற்ற நிகழ்வில் எம்எல்ஏ இரா.லட்சுமணன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பாடநூல்களை வழங்கினர்.

இதுபோல அந்தந்த பள்ளிகளிலும் மாணவ- மாணவிகளுக்குப் பாடநூல்கள் வழங்கப்பட்டன.

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக... மேலும் பார்க்க

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி... மேலும் பார்க்க

விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக... மேலும் பார்க்க

சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டு... மேலும் பார்க்க

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க