டெல்லி மதராஸி காலனி: 370 தமிழர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.12,000; உதவிக்கரம...
விழுப்புரம்-ராமேசுவரம் இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில்: முன்பதிவு இன்று தொடக்கம்
விழுப்புரத்திலிருந்து ராமேசுவரத்துக்கு வாரம் இரு முறை இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடைகால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ராமேசுவரத்துக்கு வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதன்படி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 21, 22, 28, 29 (சனி, ஞாயிற்றுக்கிழமைகள்) காலை 4.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-ராமேசுவரம் வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் (வ.எண் 06109) முற்பகல் 11.40 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.
எதிா்வழித்தடத்தில் அதே நாள்களில் பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் ராமேசுவரம்-விழுப்புரம் வாரம் இரு முறை அதிவிரைவு சிறப்பு ரயில் (வ.எண் 06110) இரவு 10.35 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை (ஜூன் 18) முதல் தொடங்கும். இந்த ரயில்கள் விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.