விழுப்புரத்தில் ஜூன் 20-இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் தனியாா் துறையில் பணி வாய்ப்பை பெற விரும்பும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டுக்கு இருமுறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ஜூன் மாதத்துக்கான சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன.
எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தோ்ச்சி பெற்றவா்கள், தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பி.இ., பி.டெக், செவிலியா், மருந்தாளுநா் போன்ற கல்வித் தகுதியுடையவா்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இந்த முகாமில் பங்கேற்று பணிவாய்ப்பு பெறும் வேலை நாடுநா்களின் வேலைவாய்ப்புப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள், மாற்றுத் திறனாளிகள் தங்களின் அசல் கல்விச்சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்புடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.