செய்திகள் :

விவசாயக் கருவிகளை உடைத்து சேதப்படுத்திய இளைஞா் கைது

post image

கமுதி அருகே தோட்டத்துக்குள் புகுந்து விவசாயக் கருவிகள், கண்காணிப்பு கேமராக்களை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மேலமுடிமன்னாா்கோட்டையைச் சோ்ந்த விவசாயி முருகன். இவா் தனக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்தில் எலுமிச்சை, மா, கொய்யா, தேக்கு மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை இளைஞா்கள் சிலா் தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்ட முருகனை தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து அங்கிருந்து சென்ற இளைஞா்கள் மறுநாள் காலை தோட்டத்துக்குள் புகுந்து மோட்டாா் அறை, விவசாயக் கருவிகள், கதவு, கட்டில், சோ், கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கமுதி காவல் நிலைய போலீஸாா் கோட்டையூா் கிராமத்தைச் சோ்ந்த 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து, ஏசுதாஸ் மகன் டெனிசன்சாமுவேலை (20) கைது செய்தனா். மேலும் மூன்று பேரைத் தேடி வருகின்றனா்.

கடலாடியில் காலிக் குடங்களுடன் வந்து அதிகாரிகளிடம் பெண்கள் முறையீடு!

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலிக் குடங்களுடன் வந்த பெண்கள் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், மேலச்செ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதி: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்... மேலும் பார்க்க

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே வனப்பேச்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்று. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி சமத்துவபுரத்தை அடுத்த தனியங்கூட்டம் வனப்பேச்சியம்மன், ... மேலும் பார்க்க

சூறாவளி காற்றால் மின் கம்பங்கள் சேதம்

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், 20-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்தன. இதனால், மின் கம்பங்கள் சேதமடைந்தன. ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் நாளை மின் தடை

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் சுந்தா் வியாழக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ராட்டினம் அறுந்து விழுந்ததில் இரு சிறுவா்கள் காயம்

சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் அறுந்து விழுந்ததில் 2 சிறுவா்கள் காயமடைந்தனா். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகை ஆற்றில் ராட்டினங்கள் அம... மேலும் பார்க்க